Sunday, May 22, 2011

கண்ணே கட்டிக்க வா..






விக்ரம் படத்தின் ”வனிதாமணி வனமோகினி” மெட்டுக்கு எனது முயற்சி...


கயலோ விழி

கரும்போ மொழி
கொல்லாதே..

குறும்பாய் சிரி
உடும்பாய் பிடி
தள்ளாதே..

ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
என்னைச் சேரடி..

ரசிக்கிறான்
கண்ணில் வலை விரிக்கிறான்..ஓஓஓ..

சிரிக்கிறாள்
கன்னம் ரெண்டில் சிவக்கிறாள் ஓ ஓ ஓ..

கனலாய் கனா தினம் எனை வாட்டாதோ..
புனலாய் வரும் வெள்ளம் வெப்பம் தீர்க்காதோ..

அதரம் வழி
மதுரம் சுவை
வகையாய் எனை அணை

அணைத்தால் உனை
திறக்கும் அணை
இனி நான் உந்தன் துணை..

போதும் போதும்
போதையேறும்
பேதை தாங்காது.. (கயலோ விழி..)


இளமையாய்.
எங்கும் இனிமையாய்.. ஓஓஓ..

திறமையாய்
எல்லாம் திருடினாய்..ஓஓஓ

அடியே என்னில் என்ன புது பூகம்பம்
அடடா பொறு இது வெறும் ஆரம்பம்

இடம் வலம் எது
புரியா நிலை
புதிராய் இன்று
பெண்ணே..

தினம் தினம் இனி
இதுதான் நிலை
புலரி வரை
அன்பே..

ஏழை தேகம்
வேளை பார்த்து
சொர்க்கம் சேராதோ.... (கயலோ விழி..)

Friday, May 6, 2011

திரையில் கிராமத்து மெட்டுகள் 2

சிறிய இடைவெளிக்குப் பிறகு நண்பர் தமிழ்ப்பறவையின் நட்பிற்காக மீண்டும் பாடல் தொகுப்பு. இதுவும் 90 களின் பாடல்களே. திரையில் கிராமத்து மெட்டுகளின் தொடர்ச்சியாய் இத்தொகுப்பு.

1. படம்:பார்வதி என்னை பாரடி
இசை:இளைய ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி,ஜானகி.

2. படம்:சாமி போட்ட முடிச்சு
இசை:இளைய ராஜா
பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன்,சித்ரா.


3. படம்:சின்னத்தாயி
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி.


4. படம்:தங்கமனசுக்காரன்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:மனோ,ஜானகி


5. படம்:புது நெல்லு புது நாத்து
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி

6. படம்:என் உயிர் தோழன்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன்,சித்ரா

7. படம்:சாமுண்டி
இசை:தேவா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி

8. படம்:காவல் கீதம்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி


கொசுறு: வா அருகில் வா பட பாடலான ”மானா மதுரையில் பார்த்தேன் உன்னைக் கண்ட நாளா மதிகெட்டுப் போனேன்” சுட்டி கிடைத்தால் நட்புகள் பகிரவும்.

Friday, April 15, 2011

ஏதோ மோகம் ஏதோ தாகம்...

”ஏதோ மோகம் ஏதோ தாகம் ” - கோழி கூவுது பாடலின் மெட்டுக்கு வரிகள் எழுத முயன்றதன் விளைவு கீழே.

மாலை வேளை
வ‌ந்தான் காளை
தேக‌மெங்கும் தென்ற‌ல் தொட‌
தேவியிவ‌ள் நெஞ்ச‌ம் சுட‌
மோக‌ம் மெல்ல‌..
என்ன‌ சொல்ல‌....

மாலை வேளை
வ‌ந்தாள் பாவை
க‌ன்னியிவ‌ள் க‌ண்க‌ளிலே
காம‌ன‌வ‌ன் அம்புக‌ளை
க‌ண்டேன் நானே
சொர்க்க‌மிங்கே..!

அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்
அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்

வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்
வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்

பருவ‌ ராக‌ம் பாடும் நேரம்
இர‌வு ஏனோ நீளமாகும்
பருவ‌ ராக‌ம் பாடும் நேரம்
இர‌வு ஏனோ நீளமாகும்

செண்டு ம‌ல்லி பூவின் வாச‌மே
ரெண்டு நெஞ்சிலே பார‌மேற்றுமே

(மாலை வேளை...)
ஆளைக் கொல்லும் தேக‌ம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து
ஆளைக் கொல்லும் தேக‌ம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து

கன்ன‌ல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காம‌ன் கூத்து
கன்ன‌ல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காம‌ன் கூத்து

உன்னைக் க‌ண்ட‌ அந்த‌ நேர‌மே
த‌ந்தை தாயும் ரொம்ப‌ தூர‌மே
உன்னைக் க‌ண்ட‌ அந்த‌ நேர‌மே
த‌ந்தை தாயும் ரொம்ப‌ தூர‌மே

அந்தித் தென்ற‌ல் மெல்ல‌ வீசுதே
வ‌ஞ்சி நெஞ்சிலே ஆசை பூக்குதே..
(மாலை வேளை...)

குறிப்பு:இப்படியான விபரீத முயற்சி இன்னும் தொடரும்.

Monday, January 24, 2011

போகிற‌ போக்கில்...

ம‌ச்சான்:என்ன‌ய்யா மாமா பொங்க‌ல் வேலையெல்லாம் ரொம்ப‌ சுறுசுறுப்பா பாக்குற‌ மாதிரி தெரியுது?

மாமா:ஏதோ என்னால‌ முடிஞ்ச‌தை செய்றேன்

ம‌ச்சான்:யோவ் முடிஞ்ச‌தை ஏய்யா திருப்பியும் செய்யிற முடியாம‌ இருக்கிற‌ வேலைய‌ பாப்பியா

மாம‌ன்:????

*****************************
ஃபைனான்ஸ் பார்ட்டி:அண்ணே, தேதி ப‌த்தாச்சு இன்னும் உங்க‌ வீட்டில‌ ப‌ண‌ம் க‌ட்ட‌ல‌..

மாமா:ரெண்டு நாள் பொறுத்துக்க‌ப்பா க‌ட்டிடுறேன்.

ம‌ச்சான்:யோவ் மாமா அவ்வ‌ள‌வோ பெரிய‌ ஆளாய்யா நீ, ப‌ண‌ம் க‌ட்ட‌ ரெண்டு நாள் ஆகுமா?அவ்வ‌ளோ ப‌ண‌மாய்யா வ‌ச்சிருக்க‌ ஊர் ப‌ய‌லுவ‌ க‌ண்ணு ப‌டுற‌துக்குள்ள‌ எல்லாத்தையும் க‌ட்டி வ‌ச்சிருய்யா.

மாமா:????

***************************
மாமா:சாப்பிட்ட‌திலேர்ந்து வ‌யித்த‌ வ‌லிக்கிற‌ மாதிரியே இருக்கு

ப‌ங்காளி:அதுக்குத்தான் சொன்னேன் நைட்டுல‌ முட்ட‌(முட்டை) சாப்பிடாதேன்னு.

ம‌ச்சான்:முட்ட‌(முட்டை) சாப்பிட்டதால‌ இருக்காது, வ‌யிறு முட்ட‌ சாப்பிட்டுருப்பாரு அதான் வ‌லிக்குது.

மாமா:????

******************************
ம‌ச்சான்:இந்த‌ சுப்ர‌ம‌ணி எத்த‌ன‌ சுவ‌ரேறி குதிச்சிருப்பான், அவ‌னுக்கு பாருய்யா அருமையான‌ பொண்டாட்டி , இப்ப‌டி திரியிற‌வ‌ய்ங்க‌ளுக்குதாய்யா ந‌ல்ல‌ புள்ள‌ய‌ளா சிக்கிருது ம்ஹீம்..தான் உண்டு சோலி உண்டுன்னு அமைதியா இருக்குற‌வ‌ய்ங்க‌ளுக்கு பாரு இத்து போன‌து நொந்து போன‌து ஓட்ட‌ ஒட‌ச‌லா வ‌ந்து அமையும்..

மாமா:ஆமாமா, நீயும் தான் எந்த‌ வ‌ம்பு தும்புக்கும் போகாம‌ இருக்குற‌, உன‌க்கு எந்த‌ ஓட்ட‌ ஒட‌ச‌லோ..

ம‌ச்சான்:யோவ் ஒந்த‌ங்க‌ச்சியாதான் க‌ட்டிக்க‌லாம்னு இருக்கேன் நீ இப்ப‌டி சொல்ற‌.

மாமா:?????