Showing posts with label டைம் பாஸ். Show all posts
Showing posts with label டைம் பாஸ். Show all posts

Friday, July 4, 2014

டைம் பாஸ்-7

கூகிள் பிளஸில் அவ்வப்போது கிறுக்கியவற்றின் தொகுப்பு.

ஊடல் பொழுதுகளில் அஃறினையெல்லாம் பேசுகின்றன.
#டீ கோப்பை வைக்கப்பட்டது, நங் என்ற ஓசையுடன்.

”இளையராஜாவின் பாடல்களைக் கேட்க முடியாதே” என்று நினைக்கிறபோதுதான் மரணம் குறித்த அச்சம் வருகிறது.
#இளையராஜாயணம்

கணவனிடம் மட்டுமே கொஞ்சலாம், கெஞ்சலாம், மிஞ்சலாம் என்கிற உண்மை ஒரு பொண்ணுக்கு புரிய வருகிற நேரம் அந்த கணவன் கணவனான பிறகு ஆசிர்வதிக்கபடுகிற முதல் தருணம்.
# மிஞ்சலாம் என்பதில் தூக்கிப்போட்டு மிதிக்கலாம் வந்திடும்ல?


சோப்பு தீர்ந்துவிடும் நாட்களில் மனைவியின் சோப்பை  பயன்படுத்தும்போது மனசெங்கும் கமழ்கிறது காதலின் வாசம்.
#அதையும் தாண்டி புனிதமானது மொமண்ட்


மாலையானால் கூடு திரும்பும் பறவைகளைப்போல இரவானால் இளையராஜாவிடம் திரும்புகிறது நெஞ்சாங்கூடு.
#இளையராஜாயணம்

அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவதென்பது மன்மதலீலையை வெல்வதற்கு ஒப்பானதாய் என்னளவில்.
#வேண்டாம் மைண்ட் வாய்ஸ் தெளிவா கேட்குது.

ராமராஜனுக்கு அப்புறம் ரொம்ப நல்லவன்னா அது நாதஸ்வரம் கோபிதான்.
#விருச்சிககாந்தின் முன்னோடி ஸ்ட்ரைட்டா ஹீரோதான்.

நேற்றுபோல் இன்று இல்லையாம்
இன்று போல் நாளை இல்லையாம்
வாரம் முச்சூடும் ஒரே மாதிரிதான் தெரியுது.
#கூலிக்கு குப்பை கொட்டுபவனின் பிழைப்பு

சாயலைக் குறித்த பிரக்ஞை இல்லாதவனின் உலகில் கழுதைகளுக்கான இடம் இருப்பதில்லை.
#எல்லாமே குதிரைதான்

பழகிய பாதையில்தான் பயணம்,
எங்கோ ஆழமாய்
நினைவுகளின் நங்கூரம்.
#பறத்தல் ஆசை


எதுக்காவது எரிச்சல் படலாம்; எல்லாத்துக்குமே என்றால் குழப்பம் உலக இயக்கத்தில் இல்லை,உங்கள் உள்ளத்தின் இயக்கத்தில் என்றறிக.
#தத்துவமாமாம்

பறவைக்கு சிறகு அழகு
பறவைக்கா என்றால் இல்லை.
#பறவையே வந்து உன்னாண்ட சொல்லுச்சா?

ஒத்த ரசனையுடைய நண்பர்களை புதிதாய் பெறும்போது இருக்கும் சிக்கல், தேய்ஞ்சு போன ரெக்கார்டையே திரும்ப திரும்ப தேய்க்க வேண்டியதாய் இருப்பதுதான்.
#ஆனாலும் சொறிய சொறிய சொகமாவுல்ல இருக்கு.

தம்பியா பிறந்தவன் கல்யாணமும், ஐ.ஆர்.சி.டி.சியில் டிக்கெட் புக் பண்ணுவதும் ஒண்ணுதான்..
#ஆல்வேஸ்_இன் _வெயிட்டிங்_லிஸ்ட்

சில நேரங்களில் சில மனிதர்கள்.
#பல நேரங்களில் பல ’நான்’கள்

”இனியும் வாழணுமா” என்கிற எண்ணம் ரசம் சாதத்திற்கு அவிச்ச முட்டையை தொட்டுக்க வைக்கும் தருணத்திலும் வரலாம்.
#என்னமோ போடா மாதவா

அட்டகாசம் என்பதன் சுருக்கமே ஆஸம்.
#செம, என்னா கண்டுபிடிப்பு

Monday, July 15, 2013

டைம் பாஸ்-6


வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நமக்கு தரப்படும்ஆப்ஷன்கள் பௌலிங்கா?, ஃபீல்டிங்கா? வகையையிலேயே இருக்கின்றன.
# இந்த ஸ்டேட்டஸ் உங்களுக்கு புடிச்சிருக்கா? இல்லை நல்லாயிருக்கா?

சொல்வதெல்லாம் உண்மையில் குந்தியிருக்கும் ஜட்ஜம்மாக்களிடம், 90களின் கவுண்டமணியை எதுனா ஒரு பஞ்சாயத்துக்கு பிராது கொடுக்கச் சொல்லி கற்பனை செய்து பார்த்து திருப்திபட்டுக்கொள்கிறேன்.
#கொண்ட போட்டவளுக்கெல்லாம் நான் தீர்ப்பு சொல்றதில்ல

மற்றவரை குறைகளோடு நேசி;குறை உன்னிடமே என்றால் கொஞ்சம் யோசி.
# ஆகையினால எல்லோரும் என்னை நேசிங்க.

எம்பொண்டாட்டிக்கு இத்தனை வகை சட்னி வைக்க தெரியுங்கறதே இன்னிக்குத்தான் தெரியும்.
#மச்சான் வந்திருக்கான்.


பகல் தூக்கம், அன்றைய மீதியை நரகமாக்கும்.
#ஆனா தூங்கும்போது சொர்க்கம்யா.

சிறைதான் என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும் சிறகுகள். 
# டேய் சத்தியமா புரியலடா

வயிறு சரியில்லையென்று மணத்தக்காளி சாம்பார் வச்சு கொடுத்தாய்ங்க. அதைப் பார்ததிலிருந்து மனசு சரியில்லை.
#என் கடன் அசைவம் சாப்பிட்டுக் கிடப்பதே

முகத்துல மொளச்சா முகமுடின்னுதானே சொல்லணும், அப்புறம் ஏண்ணே தாடிங்கிறாய்ங்க.
#மாத்தி யோசி என்ற பதத்திற்கான விதையை அனாயசமாய் தூவிய கேரக்டர். 


” டேய் மச்சி நீ எப்பயும் போகாத ஊருக்கே வழி சொல்ற”
“ங்கொய்யால போகாத ஊரு என்ன, போகாத நாட்டுக்கே வழி சொல்லுவேன்..” 
# கூகிள் மேப்ஸ்

நாம் சென்ற பாதையில் இதோ போய்க்கொண்டிருக்கிறேன்,சில கணங்களில் நானும்
சில கணங்களில் நாமுமாய்.

#அப்படியே போய்க்கொண்டே இரு,திரும்ப வந்துறாத

எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ பழகுதல் என்பதுதான் இப்போதைய எனது எதிர்பார்ப்பு.
#இதுக்கு பேருதான்  விசு’வாசம்

எந்த சொல்லிற்குள்ளும்  புதைந்திருக்கும்  என்பதால் கோபமும்கூட ஒரு  கன்னிவெடிதான்.
#வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம எங்கேயோ போய் வாங்கி கட்டிகிட்டு வந்து இங்க தத்துவம் சொல்லிகிட்டு இருக்கான்.

டைம் பாஸ்-5

கூகிள் பிளஸில் கிறுக்கியவற்றின் தொகுப்பு

நாவை அடக்க, நானை அடக்கு.
#சொல்லிட்டாருப்பா சாக்ரடீசு

”எக்ஸ்கியூஸ் மீ” என்பது ” கொஞ்சம் நகர்ந்துக்கோங்க ” என்கிற அர்த்தத்திலேயே பெரும்பாலும் சொல்லப்படுகிறது.
#அவதானிப்பு

நெருக்கடிகளில் எண்ணத்தைப் பேசாமல் என்னத்தையாவது பேசித் தொலைக்கும் இந்த பொல்லாத நாக்கு.
#  நீ வாயைத் தொறந்தாலே நெருக்கடிதானடா

தெரியாமல் செய்துவிட்ட தவறுக்கான நியாயத் தேடல்களில் தெரிந்தே பிறக்கிறது மற்றொரு தவறு.
# தெரியாம கிளிக்கி இங்க வந்தது தப்புத்தான் .

ஹோட்டல் மெனு கார்டில் , மாதத்தின் ஆரம்பத்தில் ஐட்டங்களை பார்த்தும், மாதக் கடைசியில் விலையைப் பார்த்தும் ஆர்டர் செய்வதை வழக்கமாக கொண்டவனென்றால் நீயும் என் நண்பனே.
#இப்படி நல்லதா பேசிப் பழகு

கேபிள் கனெக்‌ஷன்,செய்தித் தாள் ,பால் பாக்கெட் மாதிரி இப்போ எங்க வீட்டில் மாதச் செலவுகளில் இடம் பிடித்திருக்கும் புது வரவு(செலவு) ரிமோட் கண்ட்ரோல், டேட்டா கார்ட் மற்றும் செல் போன் பேட்டரி.
வாலு வாழும் வீடு

காட்டிலே காயும் நிலவை கண்டு கொள்ள யாருமில்லை இந்த வரியை கேட்கும்போதெல்லாம் தூர்தர்ஷன் நினைவும் கூடவே வந்துவிடுகிறது.
#எப்புடி இருந்த நீ இப்படி ஆயிட்ட

பழி வாங்க காத்திருக்கும் தருணங்கள் உன்னை பழிவாங்கும்.
# என்னை பழி வாங்கினாலும் பரவாயில்லடா கையில என்னைகாவது மாட்டாமயா போயிடுவ.

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நிறைமாத கர்ப்பிணிகளாக சிலர் வருட கணக்கில் வலம் வருகிறார்கள்.
#நிறைய மாத கர்ப்பிணிகள்

”அதுல பாருங்க”
 #வி.கே.ராமசாமியோடு வழக்கொழிந்து போய்விட்ட வசனம்.

தப்பை என்னைக்காவது  தட்டி கேட்டுறுக்கியா?
#கேட்டிறுக்கியாவா? தப்பை தட்டி கேக்கும்போது வர்ர அந்த டண்டனக்கு டனக்கு னக்கு என்னா ரிதம்யா, சூப்பரா இருக்கும்.


தன்னை வெல்லுதல் என்பது கடினமான காரியமாம்.
bubble buster கேமில் நேற்றைய எனது ஸ்கோரை இன்று நானே சர்வ சாதாரணமாய் வென்றேன் அப்படி ஒண்ணும் கஷ்டாமா இல்லையே.
#லூசு எதை எதோட கோக்குது பாரு.

கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன..
#ஆமாமா, நிச்சயிக்கப்படும்போது சொர்க்கமாத்தான் தெரியும்.


அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
#ரைட்டு, அர்த்த ராத்திரியில் மழை பெய்தால் குடை பிடிப்பவனெல்லாம் வாழ்வு வந்தவன் என எடுத்துக்கலாமா?

ஸ்ரீதேவி,கஸ்தூரி என பாட்டிகளை வைத்து விளம்பரங்கள் எடுப்பவர்கள் மோகன்லால் ரசிகர்களாக இருக்க வேண்டும் என்று அவதானிக்கிறேன்.
#ஆண்ட்டி ஹிரோ

மனக்கடலில் மட்டும் அலைகளின் சீற்றம் ஆழத்தில்தான் அதிகமாய்.
#ஆழக் கடலில் தேடிய தத்துவ முத்து

ரயில்வே ஸ்டேஷன்களில் ”காப்பி காப்பி” என்று கூவி, ’இது காஃபியின் காப்பியேயன்றி  ஒரிஜினல் அல்ல’ என்று விற்பவர்களே உங்களுக்கு சூசகமாக  உணர்த்திவிடுகிறார்கள்.
# இனி காஃபி சரியில்லை என்று புலம்புவதை விடுத்து காப்பியை காப்பியா குடிக்கணும் சரியா?

நாளும் ஒரு நான்.
#ம்க்கும் நாளும் ஒரு நீயா? நீ, நேரத்துக்கு ஒரு நீ.

முரண் படுதல் மற்றவரிடத்து எனும் போது இயல்பாய் ; நம்மிலிருந்தே எனும் போது அவஸ்தை.
#ஆமாமா அவஸ்தையோ அவஸ்தை இனி இங்கே வருவேன்

Wednesday, February 6, 2013

டைம் பாஸ்-4

அவ்வப்போது கூகிள் ப்ளஸில் கிறுக்கியவை சில...

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை- ஔவையார்
# குற்றம் பார்க்காட்டி சோறே இல்லை - சாஃப்ட்வேர் டெஸ்டிங் மக்கள்.


சொல்லாத காதலில் சோகங்களைவிட சுகங்களுக்கான இடம் விஸ்தாரம்.
# ப்ச் அதெல்லாம் உங்களுக்கு புரியாது, அபிராமி அபிராமி

”வேண்டாம்” என்று சொல்லப்படாமல் சேமிக்கும் சொற்கள் வெடித்துச் சிதறிவிடுகின்றன வாக்கியங்களாய்  ஏதோ ஒரு கணத்தில்.
தீபாவளி வரைக்கும் இப்படியே சேமிச்சுகிட்டே இரு , பட்டாசு செலவு மிச்சம்.

பழங்களை தனித்தனியே பிழிந்து சாப்பிட்டால் பழ ஜூஸ். அப்படியே ஒட்டுக்கா அடிச்சு சாப்பிட்டா அது பல ஜூஸ்.
# என்னமோ போடா..


தோல்வியை பழக்கப்படுத்திக்கலாம், வழக்கப்படுத்திக்கத்தான் கூடாது.
# இனிமே நீ இப்படியே பேசுப்பா

குறைகளை உணர்தல் என்பது ஒரு நிலை. அதுவே திருந்துதல் ஆகாது. திருத்திக்கொள்ளுதல் என்பது உணர்தலுக்கு பின்பான போராட்டம். அது கைகூடலாம் கூடாமலும் போகலாம்.
# உணர்ந்ததும் புரிந்ததும்-2012

சராசரி மனிதர்களைக் காட்டிலும் சற்றே வித்தியாசமானவன் என்ற எண்ணம் சராசரியாய் எல்லோரிடமும் இருக்கிறது.
# சாராசரியாக்கூட வேண்டாம் தோராயமா சொல்லு   இப்போ நீ என்ன சொல்ல வர்ர..

”நாம அட்வைஸ் பண்றதால யாரும் திருந்திட மாட்டாய்ங்க, அவனவன் பட்டுத்தான் திருந்துவாய்ங்க .அதனால யாருக்கும் அட்வைஸ் பண்ணாதடா” என்கிறான் நண்பன்.
# இது அட்வைஸ்ல வராது,  போதனை.


புதிது புதிதாய் அறிமுகமாகும் நட்புகள் போலவே கொத்து கொத்தாய் தொடர்பற்றும் போய்க்கொண்டே இருக்கின்றன முந்தைய நாட்களில் கொண்டாடிய நட்புகள்.
# வாழ்க்கை , நீண்டதொரு ரயில் பயணம்.

சூடா பஜ்ஜி சாப்பிடலாம்னு போனா ஆறிப்போனதா வச்சிருக்கானுங்க.. ச்சே பெருத்த ஏமாற்றம்... என்ன ஸ்டேட் கவர்மெண்ட் என்ன செண்ட்ரல் கவர்மெண்ட்..
# இப்படி பொலம்ப விட்டுட்டானுங்களே..

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் என்ன வித்தியாசம்?
#பொங்கல் பண்டிகைக்காக வெள்ளிக்கிழமை கோயம்பேட்டில் எப்படியாவது ஒரு பஸ் கிடைச்சிடும் என்று நினைக்கிறதுக்கும், வியாழன் அன்று ஐ.ஆர்.சி.டி.சியில் தட்கலில் டிக்கெட் எடுத்துடுவேன்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

Wednesday, December 5, 2012

டைம் பாஸ்-3

எந்தச் சட்டத் திட்டங்களுக்கும் உட்படுவதில்லை கனவுகளின் நீள அகலங்கள்.
#என் கனவு என் உரிமை

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

#ஒன்னாப்புல படிச்சிருப்பீங்க, கல்யாணம் ஆனதும் அர்த்தம் புரியும்.

நிழலையொத்தது மனசு,நேரத்திற்கு ஒரு பக்கம் சாயும்.

# மகான் கவுண்டர்கூட சொல்லியிருக்கார் அட அரசியலில் இதெல்லாம் .. என்று.

உதவி செய்தார்கள் என்பதற்காக  அடுத்தவரின் டைரியை புரட்டும் உரிமை தனக்கு இருப்பதாகவே கொள்கிறார்கள் சிலர்.

# கொய்யால மளிகை கணக்கை எழுதி வச்சிருக்கும் ஒரு நோட்டுக்கு என்னா சீரியஸ் பில்டப்பு.

முழம் இருபது ரூபாய் என்கிற போது நாத்தீகம் பேசும் மனசு , ரெண்டு முழம் பத்து ரூபாய் என்கிற போது பக்தி பரவசமாகிவிடுகிறது.
# என்னமோ போடா மிடில் கிளாஸ் மாதவா.

இரவில் தாமதமாக தூங்குபவனின் உச்சபட்ச சோம்பேறிச் சிந்தனை, உச்சா சேமிக்கும் பை இன்னும் கொஞ்சம் பெருசா இருந்திருக்கலாம் என்பதாக இருக்கலாம்/கிறது.

# கொயந்தயாவே இருந்துருக்கலாம்..


எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.
இதுதான் பாட்டு, எதிர் காலத்தை கணிச்சு எழுதிருக்காரு.
#பவர்கட்


கல்யாணத்திற்கு முன்பு:மாதா,பிதா,குரு,தெய்வம்
கல்யாணத்திற்கு பிறகு:மனைவி,பொண்டாட்டி,ஒய்ஃப்,வீட்டுக்காரம்மா.
# அட , எல்லாமே என் பொண்டாட்டிதாம்பா..

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

#என்னின் எழுத்து உயிரெனத் தகும்.


தோல்வியை இலக்காக்கி இறங்குகிறேன், எதிர்பாராமல் வெற்றிக் கிடைத்தால் அது எனக்கு தோல்வியா வெற்றியா?
#இப்ப நீ என்னான்ற

Tuesday, November 20, 2012

டைம் பாஸ்-2

அவ்வப்போது கூகிள் ப்ளஸில் கிறுக்கியவை சில...

என்னைப் பற்றி சொல்வதற்கு சிறப்பாய் எதுவுமே இல்லை என்பதுதான் என்னுடைய சிறப்பு.

எதிர்பாரா தருணங்களில் வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடுகிறது.

#பிளைன் பிரியாணியில் மட்டன் பீஸ்.

ஒரு பொண்ணு அழகா இருக்கா என்றோ  இல்லை என்றோ சொல்வதற்கு நாம் அழகா இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

#எப்போப்பாரு உன் மூஞ்சிய கண்ணாடியில் பாக்கவே மாட்டியான்றாய்ங்க.

மாடர்ன் வேல்ட், டெக்னாலஜி புரட்சி பற்றியெல்லாம் ஏதுமறியாது,  அதாவது நம் கூற்றுபடி கிணற்றுத் தவளைகளாக இருப்பவர்கள் , அவர்கள் வாழும் சூழலில் எவ்வித குழப்பமுமின்றி அவர்களுக்கான வாழ்க்கையை பெரிதாய் வாழ்கிறார்கள்.


பால்யகால நட்புகளையும்,அவர்களுடன் கழிந்த பொழுதுகளையும் அசைபோட இனிமையாய் இருக்கும் அதே நேரத்தில் நேரில் பார்க்கும்போது,” நலமா?” என்பதைத் தாண்டி பேசுவதற்கு ஏதுமில்லாததாய் இருக்கிறது.

# வயதின்  ரசனை மாற்றம்.

* காயிருப்பக் கனி கவர்ந்தற்று.

பாகற்காய் 

உண்மை, உண்மையாய்த் தெரிய பொய்களின் துணை தேவையாய் இருக்கிறது சமயங்களில்.


”கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும்”. 

#அப்படீன்னா கோபம் என்பது ஒரு குணம் இல்லையா?


சந்தர்ப்பங்களில் சனியனாய் அமைந்துவிடும் சாதாரணமாய் உதிர்க்கும் வார்த்தைகள்.

#யாகாவராயினும் நா காக்க

பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருட்டு என்று நினைக்குமாம்.

#திறந்தால் மட்டும் என்று கவுண்டர் விடுவது சாட்சாத் தமிழ்நாட்டு பூனை.


மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளத் துடிக்கும் தமிழ்த்திரைக் கதாபாத்திரங்களின் கைகளில்  சிக்கும் தீப்பெட்டியின் தீக்குச்சிகளில் முதலிரண்டு குச்சிகள் எப்போதும் பதத்து போனவையாகவே இருக்கின்றன.

”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்றதும் ”ஏன் மாற்றான் தோட்டத்து ரோஜா மணக்காதா?” என்றோ,”அயன் தோட்டத்து மல்லிகை மணக்காதா?” என்றோ ஃபேஸ் புக்கில் கணக்கில்லாத யாரேனும் சொன்னால் அவர்களிடம் உடனே ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணச் சொல்லி புண்ணியத்தைத் தேடிக்கொள்ளுங்கள்.


Monday, July 30, 2012

டைம் பாஸ்-1

“இனி உங்க கூட ஷாப்பிங் வந்தா,என்னன்னு கேளுங்க”என்று ஆரம்பிக்கும் சண்டையானது,“வீக் எண்ட்,ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்” என்பதில் சமாதானமாகிறது.
#என்னமோ போடா மாதவா

எங்க தஞ்சாவூர் கலெக்டர் ரொம்ப வருஷமா அங்கேயே இருக்கார். அவரையும் மாத்தினா புண்ணியமா போவும்.
 #தங்கம் சீரியல் டார்ச்சர்

”இதுவும் கடந்து போகும்” என்று சொன்னவன் ஊரு பக்கம் டவுன் பஸ்ல போனவானாத்தான் இருக்கணும் ,
#அதைத்தான் ஆடு மாடு உட்பட அனைத்தும் கடந்து போகும்.

பஸ் ,சாலு, சாக்கு, மதி இந்த வார்த்தைகளின் மூலமே மற்ற மாநில மொழிகளையும் கத்துக்கலாம்னு ஆரம்பித்தேன்.அப்புறம் ‘போதும்’னு விட்டுட்டேன் .

வாய வச்சிகிட்டு சும்மா இருந்தா பொழப்பு நடக்குமா?
 #டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

வாழ்க்கை என்பது சிலருக்கு வழுக்கையாவதில் வழுக்கிவிடுகிறது. 
#விக் எடு கொண்டாடு

”தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்குமாம்”.
#எங்க ஏரியாவில் ஒவ்வொரு ஹோட்டலா தேடித் தேடி சாப்பிட்டும் ருசியே இல்லையப்பு.

தொப்பையைக் குறைக்க, டி.வி ரிமோட்டை தூர வீசு. 
#பிட்னஸ் சீக்ரெட்

கோயில் உண்டியலை உடைச்சு திருடுபவனே சிறந்த நாத்திகவாதி. 
#பேச்சை குறை செயலில் இறங்கு

”கதவைத் திற காற்று வரட்டும்” என்னும் நித்தி மொழியை நித்திய மொழியாகச் செய்ததே இவ்வாட்சியின் ஓராண்டு சாதனை. 
#பவர் கட்

ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் சோதனையிடும் போலீசாரைக் கண்டால் யதார்த்தமாய் இருக்கும் நாம், அதை வெளிக்காட்ட நடிக்க ஆரம்பிக்கிறோம். 
#அவதானிப்பு

தனக்குத்தானே புலம்புதல் என்பது மனநிலையோ அல்லது பணநிலையோ சரியில்லாததின் அறிகுறி.
#சார் இன்னும் சம்பளம் கிரிடிட் ஆவல

Thursday, October 29, 2009

பாடல் வரிகளில் ஒரே சிந்தனை....

1.”சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன”

2.”பலகோடி பெண்களிலே எதற்கு என்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்”

3.”இடது விழியில் தூசு விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே”

4.”ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்”

5.“கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா”

6.”மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது”

7.“கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி”

8.”கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்”

9.“இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க”

10.“ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல”