Tuesday, November 20, 2012

டைம் பாஸ்-2

அவ்வப்போது கூகிள் ப்ளஸில் கிறுக்கியவை சில...

என்னைப் பற்றி சொல்வதற்கு சிறப்பாய் எதுவுமே இல்லை என்பதுதான் என்னுடைய சிறப்பு.

எதிர்பாரா தருணங்களில் வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடுகிறது.

#பிளைன் பிரியாணியில் மட்டன் பீஸ்.

ஒரு பொண்ணு அழகா இருக்கா என்றோ  இல்லை என்றோ சொல்வதற்கு நாம் அழகா இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

#எப்போப்பாரு உன் மூஞ்சிய கண்ணாடியில் பாக்கவே மாட்டியான்றாய்ங்க.

மாடர்ன் வேல்ட், டெக்னாலஜி புரட்சி பற்றியெல்லாம் ஏதுமறியாது,  அதாவது நம் கூற்றுபடி கிணற்றுத் தவளைகளாக இருப்பவர்கள் , அவர்கள் வாழும் சூழலில் எவ்வித குழப்பமுமின்றி அவர்களுக்கான வாழ்க்கையை பெரிதாய் வாழ்கிறார்கள்.


பால்யகால நட்புகளையும்,அவர்களுடன் கழிந்த பொழுதுகளையும் அசைபோட இனிமையாய் இருக்கும் அதே நேரத்தில் நேரில் பார்க்கும்போது,” நலமா?” என்பதைத் தாண்டி பேசுவதற்கு ஏதுமில்லாததாய் இருக்கிறது.

# வயதின்  ரசனை மாற்றம்.

* காயிருப்பக் கனி கவர்ந்தற்று.

பாகற்காய் 

உண்மை, உண்மையாய்த் தெரிய பொய்களின் துணை தேவையாய் இருக்கிறது சமயங்களில்.


”கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும்”. 

#அப்படீன்னா கோபம் என்பது ஒரு குணம் இல்லையா?


சந்தர்ப்பங்களில் சனியனாய் அமைந்துவிடும் சாதாரணமாய் உதிர்க்கும் வார்த்தைகள்.

#யாகாவராயினும் நா காக்க

பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருட்டு என்று நினைக்குமாம்.

#திறந்தால் மட்டும் என்று கவுண்டர் விடுவது சாட்சாத் தமிழ்நாட்டு பூனை.


மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளத் துடிக்கும் தமிழ்த்திரைக் கதாபாத்திரங்களின் கைகளில்  சிக்கும் தீப்பெட்டியின் தீக்குச்சிகளில் முதலிரண்டு குச்சிகள் எப்போதும் பதத்து போனவையாகவே இருக்கின்றன.

”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்றதும் ”ஏன் மாற்றான் தோட்டத்து ரோஜா மணக்காதா?” என்றோ,”அயன் தோட்டத்து மல்லிகை மணக்காதா?” என்றோ ஃபேஸ் புக்கில் கணக்கில்லாத யாரேனும் சொன்னால் அவர்களிடம் உடனே ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணச் சொல்லி புண்ணியத்தைத் தேடிக்கொள்ளுங்கள்.