
நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை , நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்தப் பொழுதை...
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Friday, December 11, 2009
Tuesday, September 22, 2009
வேட்டைக்காரன் என் பார்வையில்
ஒரு பேராழியில் ஏற்படும் மிகப்பெரிய கொந்தளிப்புக் காட்சியோடு தொடங்குகிறது படம். கேமரா சூம் அவுட் ஆக ஆக பரந்து விரிந்ததொரு ஆலமரத்தினடியில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கும் எணணெய்ச் சட்டிதான் அந்த பெருஞ்சமுத்திரம் எனத் தெரியும்போது ’அட’ என ஆரம்பக்காட்சியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
பாட்டியின் கடையில் வடைக்கு ஏகப்பட்ட கியூ நிற்க, பாட்டியோ தன் பேரன் முதல் போணி செய்தால்தான் மற்றவர்களுக்கு வடையெனச் சொல்லியபடியே தட்டில் வடையை வைத்துக்கொண்டு காத்திருக்க, திடீரென இடியும் மின்னலுமாய் பெருமழைக்கான அறிகுறிகள் தோன்ற எங்கிருந்து வருகிறார் என்றேத் தெரியாமல் மாடுகள் மிரளும், நாய்கள் கண்டால் நாற்பது கிலோமீட்டருக்கு துரத்தும் நிறத்திலான காஸ்ட்யூமில் பாட்டியின் முன்பு தோன்றுகிறார் ஹீரோ.
”வந்துட்டியா ராசா” என்று பாட்டி ஹீரோவின் முகத்தை வருடி திருஷ்டி முறிக்கும்போது மீண்டும் மின்னல் வெட்டி இடியிடிக்கிறது, ஹீரோ தனது தலையைச் சாய்த்து வானத்தை நோக்கி கிராஸாக ஒரு லுக்விட திரண்டிருக்கும் கருமேகக் கூட்டங்கள் பஞ்சாய் திக்கெட்டும் பறக்க, பளீரென வானம் துடைத்து வைக்கப்பட்டதுபோல் ஆகிவிடுகிறது.
இக்காட்சியைக் கண்டதும் விசில் சத்தம் தியேட்டரை நிறைக்கிறது, அந்தச் சத்தத்தோடே தனது அறிமுகக் குத்துப் பாடலை ஆடிமுடிக்கிறார் ஹீரோ.
பாடல் முடிந்ததும் பாட்டியம்மா வடையை ஹீரோவிற்கு ஊட்ட எத்தணிக்கும்போது ஆலமரத்தில் அமர்ந்து ரொம்ப நேரமாக வடைமேலேயேக் கண்ணாக இருக்கும் ஒரு காக்கா இமைக்கும் நேரத்தில் வடையை கவ்விக்கொண்டுச் சென்றுவிடுகிறது.
இதை எதிர்பாரா பாட்டி மற்றும் பேரனின் முகங்களில் அதிர்ச்சி அலைகள். மீண்டும் கார்மேகம் சூழ்கிறது. பாட்டி பத்து கட்டபொம்மி(கள்),ஐம்பது மனோகரா கண்ணாம்பாள்(கள்),நூறு கண்ணகி(கள்)யாக மாறி ”பேராண்டி அந்த காக்காவை சும்மா விடக்கூடாது,அதை சூப் வைத்தேத் தீருவேன். நீ உப்பு போட்டு வடை திங்கறவனாயிருந்தா அந்த காக்காயோட என்னை வந்து பாரு, அப்படியில்ல இந்த ஜென்மத்துக்கும் உனக்கு வடை கிடையாது” என ’வட போச்சே’ என்கிற ஆதங்கத்தில் வீரவசனம் பேசுகிறார். ஒவ்வொரு வசனத்திற்கும் இடையிலும் பயங்கரமான இடி மின்னல் எஃபெக்ட்டும் அதைவிட பயங்கரமாக ஹீரோவின் குளோசப் ஷாட்களுமாய் பட்டாசாய் இருக்கிறது அக்காட்சி.
பாட்டி தனக்கு சின்ன வயதிலிருந்தே வடை கொடுத்து வளர்த்ததை ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் ஓட்டி முடித்து, வடைக்கு விடை தேடும் முயற்சியாக அந்தக் காக்காவைப் பிடிக்க வேட்டைக்காரனாகிறார் ஹீரோ.
இங்கே ஆரம்பிக்கும் பரபரப்பு இறுதிவரை தொடர்கிறது. அதன் பின் ஹீரோ வரும் ஒவ்வொரு காட்சியிலும் பேக்ரவுண்டில் வரும் அந்த ”காரன் காரன் வேட்டைக்காரன்” தீம் மியூசிக் பட்டையைக் கிளப்புகிறது.
மரத்திற்கு மரம் பறந்து எப்படியாது வடையை தின்றுவிட போராடும் காக்காவைவிட பலமடங்கு உயரத்தில் பறந்து பறந்து விரட்டும் ஹீரோவைப் பார்த்து காக்கா மிரளும் குளோசப் ஷாட்களில் கேமரா மேன் சபாஷ் வாங்குகிறார்.
ஹை ஓல்ட்டேஜ் மின்சாரக் கம்பிகளிலெல்லாம் ஹீரோ அனாயசமாக தொங்கிச் செல்லும் காட்சிகளில் ஹீரோவின் பவர் என்ன என்பதை நேரடி வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு ரசிகனுக்கும் புரிய வைப்பது டைரக்டரின் சாமர்த்தியம். இப்படி பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் படமெங்கும் தோரணங்களாய்.
மாற்றி மாற்றிப் பறந்ததில் ஹீரோவும் காக்காவும் ஒரு காட்டிற்குள் வந்துவிடுகின்றனர். காக்கா மிகவும் சோர்வாகி ஆற்றங்கரை மரமொன்றில் அமர்ந்துவிடுகிறது. ஹீரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருகும் மரப்பாலத்தில் நின்று வில்லில் அம்பை வைத்துக் காக்காவை நோக்கி குறிபார்க்கையில் ஒரு கட்டெறும்பு ஹீரோவின் காலைக்கடிக்க ஹிரோ அவசரமாய் காலை சொறியக் குனிகையில் தவறி ஆற்றில் விழப்போகிறார் அப்போது அவ்வழியாய் வரும் காட்டுவாசிப்பெண் ஹீரோவைத் தாங்கிப் பிடிக்கிறார்.
அந்தக் காட்டுவாசிப் பெண்தான் ஹீரோயின்.படம் பார்ப்பவர்களுக்கே நாலைந்து காட்சிகளுக்குப் பிறகுதான் அவர்தான் ஹீரோயின் என்பதே புலப்படுகிறது. மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதால் ரொம்பவே பொருத்தமாயிருக்கிறார் இந்தக் கதாபாத்திரத்திற்கு.
இதற்கிடையில் கட்டெறும்புக் கடிக்கையில் காக்கா தப்பிவிடுகிறது.அப்போது காக்காவிற்கும் கட்டெறும்புக்குமான நட்பின் ஃபிளாஷ் பேக் ஒன்று வருகிறது. இக்காட்சியின்போது எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுவன் "ஹையா இந்தக் கதை எனக்குத் தெரியும்" என துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இயக்குனர் தானே பலநாள் யோசித்து எழுதிய அருமையான ஃபிளாஷ் பேக் ஒன்று இப்படத்தில் யாரும் யோசிக்காத கோணத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருந்ததை இங்கே நினைவுக் கூர்வது அவசியமாகிறது.
இதுவரை விறுவிறுப்பாய் நகரும் கதையில் ஹீரோயின் வந்த பிறகு ஹீரோவை காக்காவை துரத்த வைப்பதா இல்லை ஹீரோயினைத் துரத்த வைப்பதா என்று இந்த இடத்தில் டைரக்டர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். அதைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.
சரியாக கதை சிறிது தொய்வாகும் இந்த இடத்தில் ஹீரோயின் ஆற்றில் விழுந்துத் தத்தளிக்கிறார்.ஹீரோவிற்கோ நீச்சல் தெரியாது ஆற்றின் கரையிலேயே நின்று கதறி அழுகிறான், மீண்டும் திரைக்கதை சூடுபிடிக்கிறது. தியேட்டரில் ஆங்காங்கே விசும்பல் சத்தம்.அப்போது ஒரு தேவதை ஆற்றில் இருந்துத் தோன்றி ஹீரோவிற்கு உதவுகிறது. தேவதையைப் பார்த்ததும் எனக்கு அருகில் அமர்ந்திருந்தச் சிறுவன் மீண்டும் ஆரம்பித்துவிட்டான்.
ஆனால் புத்திசாலித்தனமாக டைரக்டர் அந்த தேவதையை யூஸ் பண்ணியிருப்பதில் பாஸாகிறார்.தேவதை முதலில் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா வழித் தோன்றல்களான இரண்டு கவர்ச்சி கன்னிகளை எடுத்துவந்து இதுதான் உன் காதலியா எனக் கேட்குமிடத்தில் ஹீரோ ஆஹா ஹீரோயினைவிட இது சூப்பராகீதே என்று மைண்ட் வாய்சில் பேசிக்கொண்டிருக்கும்போதே வருகிறது அந்த சூப்பர் ஹிட் பாடல் இருவருடனும் தலா ஆளுக்கொரு சரணமாய் பிரித்து செம்ம குத்து குத்துகிறார்.
தேவதை மூன்றாவதாய் ஹீரோயினை எடுத்துக் கொடுக்கும்போது மற்ற குஜிலிகளையும் பரிசாகக் கொடுத்ததா,ஹீரோ காக்காவைப் பிடித்து பாட்டியிடம் வடையை வாங்கினாரா என்பதை பரபரப்பான இறுதிக் காட்சிகளாக்கி வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர்.
படத்தின் இறுதிக் காட்சியில் ஹீரோயின் தாய் மாமனான வில்லன் ”ஏண்டா காக்காப் பிடிக்கத் தெரியாத நீயெல்லாம்..”என்று ஆரம்பித்து பேசும்போது வரும் ”காக்கா பிடிக்கத் தெரியாத” என்பதையே தனது கேப்ஷனாக வைத்து புதிய கட்சியை ஆரம்பித்து ஹீரோ அரசியலில் புகுந்து பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தும் காட்சியில் தியேட்டரில் ”தலைவா” என்ற கோஷம் விண்ணைத் தொடுகிறது.
டிஸ்கி:முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட இந்த இடுகையைப் படித்து யாருக்கும் சிரிப்பு வரவில்லையென்றால் ஒரிஜினல் வேட்டைக்காரனுக்கு டிக்கெட் ஃப்ரீயாக தரப்படும்.
பாதுகாப்புக் கருதி நானும் ஒரு வேட்டைக்காரன் ரசிகன் என்ற உண்மையையும் சொல்லிக்கிறேன்.
பாட்டியின் கடையில் வடைக்கு ஏகப்பட்ட கியூ நிற்க, பாட்டியோ தன் பேரன் முதல் போணி செய்தால்தான் மற்றவர்களுக்கு வடையெனச் சொல்லியபடியே தட்டில் வடையை வைத்துக்கொண்டு காத்திருக்க, திடீரென இடியும் மின்னலுமாய் பெருமழைக்கான அறிகுறிகள் தோன்ற எங்கிருந்து வருகிறார் என்றேத் தெரியாமல் மாடுகள் மிரளும், நாய்கள் கண்டால் நாற்பது கிலோமீட்டருக்கு துரத்தும் நிறத்திலான காஸ்ட்யூமில் பாட்டியின் முன்பு தோன்றுகிறார் ஹீரோ.
”வந்துட்டியா ராசா” என்று பாட்டி ஹீரோவின் முகத்தை வருடி திருஷ்டி முறிக்கும்போது மீண்டும் மின்னல் வெட்டி இடியிடிக்கிறது, ஹீரோ தனது தலையைச் சாய்த்து வானத்தை நோக்கி கிராஸாக ஒரு லுக்விட திரண்டிருக்கும் கருமேகக் கூட்டங்கள் பஞ்சாய் திக்கெட்டும் பறக்க, பளீரென வானம் துடைத்து வைக்கப்பட்டதுபோல் ஆகிவிடுகிறது.
இக்காட்சியைக் கண்டதும் விசில் சத்தம் தியேட்டரை நிறைக்கிறது, அந்தச் சத்தத்தோடே தனது அறிமுகக் குத்துப் பாடலை ஆடிமுடிக்கிறார் ஹீரோ.
பாடல் முடிந்ததும் பாட்டியம்மா வடையை ஹீரோவிற்கு ஊட்ட எத்தணிக்கும்போது ஆலமரத்தில் அமர்ந்து ரொம்ப நேரமாக வடைமேலேயேக் கண்ணாக இருக்கும் ஒரு காக்கா இமைக்கும் நேரத்தில் வடையை கவ்விக்கொண்டுச் சென்றுவிடுகிறது.
இதை எதிர்பாரா பாட்டி மற்றும் பேரனின் முகங்களில் அதிர்ச்சி அலைகள். மீண்டும் கார்மேகம் சூழ்கிறது. பாட்டி பத்து கட்டபொம்மி(கள்),ஐம்பது மனோகரா கண்ணாம்பாள்(கள்),நூறு கண்ணகி(கள்)யாக மாறி ”பேராண்டி அந்த காக்காவை சும்மா விடக்கூடாது,அதை சூப் வைத்தேத் தீருவேன். நீ உப்பு போட்டு வடை திங்கறவனாயிருந்தா அந்த காக்காயோட என்னை வந்து பாரு, அப்படியில்ல இந்த ஜென்மத்துக்கும் உனக்கு வடை கிடையாது” என ’வட போச்சே’ என்கிற ஆதங்கத்தில் வீரவசனம் பேசுகிறார். ஒவ்வொரு வசனத்திற்கும் இடையிலும் பயங்கரமான இடி மின்னல் எஃபெக்ட்டும் அதைவிட பயங்கரமாக ஹீரோவின் குளோசப் ஷாட்களுமாய் பட்டாசாய் இருக்கிறது அக்காட்சி.
பாட்டி தனக்கு சின்ன வயதிலிருந்தே வடை கொடுத்து வளர்த்ததை ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் ஓட்டி முடித்து, வடைக்கு விடை தேடும் முயற்சியாக அந்தக் காக்காவைப் பிடிக்க வேட்டைக்காரனாகிறார் ஹீரோ.
இங்கே ஆரம்பிக்கும் பரபரப்பு இறுதிவரை தொடர்கிறது. அதன் பின் ஹீரோ வரும் ஒவ்வொரு காட்சியிலும் பேக்ரவுண்டில் வரும் அந்த ”காரன் காரன் வேட்டைக்காரன்” தீம் மியூசிக் பட்டையைக் கிளப்புகிறது.
மரத்திற்கு மரம் பறந்து எப்படியாது வடையை தின்றுவிட போராடும் காக்காவைவிட பலமடங்கு உயரத்தில் பறந்து பறந்து விரட்டும் ஹீரோவைப் பார்த்து காக்கா மிரளும் குளோசப் ஷாட்களில் கேமரா மேன் சபாஷ் வாங்குகிறார்.
ஹை ஓல்ட்டேஜ் மின்சாரக் கம்பிகளிலெல்லாம் ஹீரோ அனாயசமாக தொங்கிச் செல்லும் காட்சிகளில் ஹீரோவின் பவர் என்ன என்பதை நேரடி வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு ரசிகனுக்கும் புரிய வைப்பது டைரக்டரின் சாமர்த்தியம். இப்படி பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் படமெங்கும் தோரணங்களாய்.
மாற்றி மாற்றிப் பறந்ததில் ஹீரோவும் காக்காவும் ஒரு காட்டிற்குள் வந்துவிடுகின்றனர். காக்கா மிகவும் சோர்வாகி ஆற்றங்கரை மரமொன்றில் அமர்ந்துவிடுகிறது. ஹீரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருகும் மரப்பாலத்தில் நின்று வில்லில் அம்பை வைத்துக் காக்காவை நோக்கி குறிபார்க்கையில் ஒரு கட்டெறும்பு ஹீரோவின் காலைக்கடிக்க ஹிரோ அவசரமாய் காலை சொறியக் குனிகையில் தவறி ஆற்றில் விழப்போகிறார் அப்போது அவ்வழியாய் வரும் காட்டுவாசிப்பெண் ஹீரோவைத் தாங்கிப் பிடிக்கிறார்.
அந்தக் காட்டுவாசிப் பெண்தான் ஹீரோயின்.படம் பார்ப்பவர்களுக்கே நாலைந்து காட்சிகளுக்குப் பிறகுதான் அவர்தான் ஹீரோயின் என்பதே புலப்படுகிறது. மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதால் ரொம்பவே பொருத்தமாயிருக்கிறார் இந்தக் கதாபாத்திரத்திற்கு.
இதற்கிடையில் கட்டெறும்புக் கடிக்கையில் காக்கா தப்பிவிடுகிறது.அப்போது காக்காவிற்கும் கட்டெறும்புக்குமான நட்பின் ஃபிளாஷ் பேக் ஒன்று வருகிறது. இக்காட்சியின்போது எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுவன் "ஹையா இந்தக் கதை எனக்குத் தெரியும்" என துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இயக்குனர் தானே பலநாள் யோசித்து எழுதிய அருமையான ஃபிளாஷ் பேக் ஒன்று இப்படத்தில் யாரும் யோசிக்காத கோணத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருந்ததை இங்கே நினைவுக் கூர்வது அவசியமாகிறது.
இதுவரை விறுவிறுப்பாய் நகரும் கதையில் ஹீரோயின் வந்த பிறகு ஹீரோவை காக்காவை துரத்த வைப்பதா இல்லை ஹீரோயினைத் துரத்த வைப்பதா என்று இந்த இடத்தில் டைரக்டர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். அதைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.
சரியாக கதை சிறிது தொய்வாகும் இந்த இடத்தில் ஹீரோயின் ஆற்றில் விழுந்துத் தத்தளிக்கிறார்.ஹீரோவிற்கோ நீச்சல் தெரியாது ஆற்றின் கரையிலேயே நின்று கதறி அழுகிறான், மீண்டும் திரைக்கதை சூடுபிடிக்கிறது. தியேட்டரில் ஆங்காங்கே விசும்பல் சத்தம்.அப்போது ஒரு தேவதை ஆற்றில் இருந்துத் தோன்றி ஹீரோவிற்கு உதவுகிறது. தேவதையைப் பார்த்ததும் எனக்கு அருகில் அமர்ந்திருந்தச் சிறுவன் மீண்டும் ஆரம்பித்துவிட்டான்.
ஆனால் புத்திசாலித்தனமாக டைரக்டர் அந்த தேவதையை யூஸ் பண்ணியிருப்பதில் பாஸாகிறார்.தேவதை முதலில் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா வழித் தோன்றல்களான இரண்டு கவர்ச்சி கன்னிகளை எடுத்துவந்து இதுதான் உன் காதலியா எனக் கேட்குமிடத்தில் ஹீரோ ஆஹா ஹீரோயினைவிட இது சூப்பராகீதே என்று மைண்ட் வாய்சில் பேசிக்கொண்டிருக்கும்போதே வருகிறது அந்த சூப்பர் ஹிட் பாடல் இருவருடனும் தலா ஆளுக்கொரு சரணமாய் பிரித்து செம்ம குத்து குத்துகிறார்.
தேவதை மூன்றாவதாய் ஹீரோயினை எடுத்துக் கொடுக்கும்போது மற்ற குஜிலிகளையும் பரிசாகக் கொடுத்ததா,ஹீரோ காக்காவைப் பிடித்து பாட்டியிடம் வடையை வாங்கினாரா என்பதை பரபரப்பான இறுதிக் காட்சிகளாக்கி வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர்.
படத்தின் இறுதிக் காட்சியில் ஹீரோயின் தாய் மாமனான வில்லன் ”ஏண்டா காக்காப் பிடிக்கத் தெரியாத நீயெல்லாம்..”என்று ஆரம்பித்து பேசும்போது வரும் ”காக்கா பிடிக்கத் தெரியாத” என்பதையே தனது கேப்ஷனாக வைத்து புதிய கட்சியை ஆரம்பித்து ஹீரோ அரசியலில் புகுந்து பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தும் காட்சியில் தியேட்டரில் ”தலைவா” என்ற கோஷம் விண்ணைத் தொடுகிறது.
டிஸ்கி:முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட இந்த இடுகையைப் படித்து யாருக்கும் சிரிப்பு வரவில்லையென்றால் ஒரிஜினல் வேட்டைக்காரனுக்கு டிக்கெட் ஃப்ரீயாக தரப்படும்.
பாதுகாப்புக் கருதி நானும் ஒரு வேட்டைக்காரன் ரசிகன் என்ற உண்மையையும் சொல்லிக்கிறேன்.
Monday, August 24, 2009
உஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே...
நாங்கள் வழக்கமா செல்கிற டீக்கடையில் எப்போதும் வடை போட்டிருப்பார்கள், புதிதாக இப்போது சமோசாவும்.
கடை பையன்:அண்ணே, சமோசா சூப்பரா இருக்கும்ணே சாப்பிட்டுப் பாருங்க.
நண்பர்:வடை சாப்பிடலாம்னு நெனச்சேன், எனக்கு சமோசா பிடிக்காதுப்பா.
க.பை:அப்போ வடை தரவா?
நண்பர்: உங்க கடையில் சமோசா தானே நல்லாயிருக்கும்னு சொன்னே, அதனால எனக்கு வடை வேண்டாம்.
க.பை:?????
அதே டீக்கடையில் மற்றொரு நாள் டீயின் விலை 3 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக திடீர் விலையேற்றம் செய்திருந்தார்கள்.
நண்பர்: என்ன இப்படி திடீன்னு வெலய ஏத்திட்டீங்க.
க.பை: மழை பெய்து தேயிலையெல்லாம் வெள்ளத்தில் மூழ்கிடுச்சாம், அதனால டீத்தூள் வெலையெல்லாம் ஏறி போச்சுண்ணே.
நண்பர்:அப்படின்னா சக்கரை செலவு மிச்சம், நீ விலைய கம்மிதானேப்பா செய்யணும்.
க.பை: எப்படிண்ணே சக்கரை செலவு மிச்சம்?
நண்பர்: நீதானே சொன்ன தேயிலையெல்லாம் வெல்லத்தில மூழ்கிடுச்சுன்னு.
க.பை: ஆரம்பிச்சிட்டீங்களா?
இது இன்னொரு நாள், நண்பர் கேக் ஒன்றை எடுத்து சுவைத்துக் கொண்டே கடை பையனிடம்,
நண்பர்: தம்பி,பர்த்டே கொண்டாடினா எல்லோரும் என்ன கொடுப்பாங்க.
க.பை: ’கேக்’தாண்ணே கொடுப்பாங்க(சிரித்தபடியே சொன்னான்)
நண்பர்:உன் கடையில் ’கேக்’கே சில பர்த்டே கொண்டாடியிருக்கும் போல.
க.பை:????
கடை பையன்:அண்ணே, சமோசா சூப்பரா இருக்கும்ணே சாப்பிட்டுப் பாருங்க.
நண்பர்:வடை சாப்பிடலாம்னு நெனச்சேன், எனக்கு சமோசா பிடிக்காதுப்பா.
க.பை:அப்போ வடை தரவா?
நண்பர்: உங்க கடையில் சமோசா தானே நல்லாயிருக்கும்னு சொன்னே, அதனால எனக்கு வடை வேண்டாம்.
க.பை:?????
=================
அதே டீக்கடையில் மற்றொரு நாள் டீயின் விலை 3 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக திடீர் விலையேற்றம் செய்திருந்தார்கள்.
நண்பர்: என்ன இப்படி திடீன்னு வெலய ஏத்திட்டீங்க.
க.பை: மழை பெய்து தேயிலையெல்லாம் வெள்ளத்தில் மூழ்கிடுச்சாம், அதனால டீத்தூள் வெலையெல்லாம் ஏறி போச்சுண்ணே.
நண்பர்:அப்படின்னா சக்கரை செலவு மிச்சம், நீ விலைய கம்மிதானேப்பா செய்யணும்.
க.பை: எப்படிண்ணே சக்கரை செலவு மிச்சம்?
நண்பர்: நீதானே சொன்ன தேயிலையெல்லாம் வெல்லத்தில மூழ்கிடுச்சுன்னு.
க.பை: ஆரம்பிச்சிட்டீங்களா?
========================
இது இன்னொரு நாள், நண்பர் கேக் ஒன்றை எடுத்து சுவைத்துக் கொண்டே கடை பையனிடம்,
நண்பர்: தம்பி,பர்த்டே கொண்டாடினா எல்லோரும் என்ன கொடுப்பாங்க.
க.பை: ’கேக்’தாண்ணே கொடுப்பாங்க(சிரித்தபடியே சொன்னான்)
நண்பர்:உன் கடையில் ’கேக்’கே சில பர்த்டே கொண்டாடியிருக்கும் போல.
க.பை:????
Friday, July 10, 2009
டயலாக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க
சென்னையில் வேலை தேடும் வேலையில் இருந்த இரண்டு நண்பர்களிடையே நடந்த மேன்ஷன் உரையாடல்.
நண்பர்1:டேய் எறுமை எழுந்திரிடா மணி பத்தாச்சு இப்படித் தூங்கதான் தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கியா?
(தூக்கத்தில் இருந்த நண்பர் 2 மிகுந்த டென்ஷனோடு)
நண்பர்2:ஏன்டா பன்னி, இப்படி டெய்லியும் என்னை எழுப்பிவிடத்தான் நீ கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கியா?
நண்பர்1:?????
சாலையோரத்தில் நடந்து போகும் நண்பர் மீது டூ வீலர் ஓட்டி வரும் ஒரு டீன் ஏஜ் பையன் பேலன்ஸ் தவறி மோதியதும் நடந்த உரையாடல்.
பையன்:அண்ணே புது வண்டி இன்னிக்குத்தாண்ணே எடுத்துட்டு வந்தேன்,சாரிண்ணே இப்போதான் ஓட்டக் கத்துக்கிறேன் அதான் தெரியாம...
நண்பர்:என்னைப் பார்த்தா உனக்கு எலுமிச்சம்பழம் மாதிரி இருக்கா? எலுமிச்சம்பழம் ரவுண்டா மஞ்சளா சின்னதா இருக்கும் அதுல ஏத்து.
பையன்:?????
இரண்டு நண்பர்கள் ஷேர்ட் பர்சேஸ் செய்தபோது,சேல்ஸ்மேன் 600 ரூபாய் ஷேர்ட்டில் ஆரம்பித்து படிப்படியாகக் குறைந்து இருனூற்றைம்பது ரூபாய் ஷேர்ட்டைக் காட்டியதும்,அதில் ஒன்றை செலக்ட் செய்த நண்பரிடம் மற்றொரு நண்பர் கிசுகிசுப்பான குரலில்,
நண்பன் 1: ஏன்டா நாதாரி, கடைசியா உங்கிட்ட எரனூத்தி அம்பது ரூபாதான் இருந்திச்சா?
நண்பன் 2:கடைசியா இல்லடா, கடையில் நுழைஞ்சப்பலேருந்தே அவ்வளவுதான் இருந்துச்சு.
நண்பர் 1:?????
விடுதியில் தங்கிப் படிக்கும் மூன்று மாணவர்களுக்குள் தங்களின் தேர்வு முடிவுகளைப் பற்றி பேசிக்கொண்டது,
நண்பர் 1 :என்னடா ரிசல்ட் என்னாச்சு?
நண்பர் 2:ச்சே ஒரு பேப்பர்ல ஜஸ்ட் நாலு மார்க்குல போச்சுடா.
(அறையில் படுத்திருக்கும் மற்றொரு நண்பணிடம் நண்பர் 1)
நண்பர்1:உன்னோட ரிசல்ட் என்னாச்சுடா?
(மூன்றாவது நண்பர் பதில் சொல்வதற்குள் இரண்டாவது நண்பர் முந்திக்கொண்டு)
நண்பர் 2:எனக்காவது நாலு மார்க்குல போச்சு,அவன் எடுத்ததே நாலு மார்க்தாண்டா.(என்று சொல்லியபடியே ஹா ஹாவென சிரிக்க,டென்ஷனான மூன்றாவது நண்பர்)
நண்பர் 3:செத்தவன் காலு வடக்கே இருந்தா என்ன,தெற்கே இருந்தா என்ன?
மொத்தத்தில் ரெண்டு பேரும் ஃபெயிலு இதில என்ன உனக்கு கம்பேரிஷன் வேண்டிக்கிடக்கு.
(நண்பர் 1 சிரிக்க ,நண்பர் 2 முறைக்க நண்பர் 3 இழுத்து போர்த்திக் கொண்டு தூக்கத்தைக் கண்டினியூ செய்கிறார்.)
நண்பர்1:டேய் எறுமை எழுந்திரிடா மணி பத்தாச்சு இப்படித் தூங்கதான் தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கியா?
(தூக்கத்தில் இருந்த நண்பர் 2 மிகுந்த டென்ஷனோடு)
நண்பர்2:ஏன்டா பன்னி, இப்படி டெய்லியும் என்னை எழுப்பிவிடத்தான் நீ கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கியா?
நண்பர்1:?????
சாலையோரத்தில் நடந்து போகும் நண்பர் மீது டூ வீலர் ஓட்டி வரும் ஒரு டீன் ஏஜ் பையன் பேலன்ஸ் தவறி மோதியதும் நடந்த உரையாடல்.
பையன்:அண்ணே புது வண்டி இன்னிக்குத்தாண்ணே எடுத்துட்டு வந்தேன்,சாரிண்ணே இப்போதான் ஓட்டக் கத்துக்கிறேன் அதான் தெரியாம...
நண்பர்:என்னைப் பார்த்தா உனக்கு எலுமிச்சம்பழம் மாதிரி இருக்கா? எலுமிச்சம்பழம் ரவுண்டா மஞ்சளா சின்னதா இருக்கும் அதுல ஏத்து.
பையன்:?????
இரண்டு நண்பர்கள் ஷேர்ட் பர்சேஸ் செய்தபோது,சேல்ஸ்மேன் 600 ரூபாய் ஷேர்ட்டில் ஆரம்பித்து படிப்படியாகக் குறைந்து இருனூற்றைம்பது ரூபாய் ஷேர்ட்டைக் காட்டியதும்,அதில் ஒன்றை செலக்ட் செய்த நண்பரிடம் மற்றொரு நண்பர் கிசுகிசுப்பான குரலில்,
நண்பன் 1: ஏன்டா நாதாரி, கடைசியா உங்கிட்ட எரனூத்தி அம்பது ரூபாதான் இருந்திச்சா?
நண்பன் 2:கடைசியா இல்லடா, கடையில் நுழைஞ்சப்பலேருந்தே அவ்வளவுதான் இருந்துச்சு.
நண்பர் 1:?????
விடுதியில் தங்கிப் படிக்கும் மூன்று மாணவர்களுக்குள் தங்களின் தேர்வு முடிவுகளைப் பற்றி பேசிக்கொண்டது,
நண்பர் 1 :என்னடா ரிசல்ட் என்னாச்சு?
நண்பர் 2:ச்சே ஒரு பேப்பர்ல ஜஸ்ட் நாலு மார்க்குல போச்சுடா.
(அறையில் படுத்திருக்கும் மற்றொரு நண்பணிடம் நண்பர் 1)
நண்பர்1:உன்னோட ரிசல்ட் என்னாச்சுடா?
(மூன்றாவது நண்பர் பதில் சொல்வதற்குள் இரண்டாவது நண்பர் முந்திக்கொண்டு)
நண்பர் 2:எனக்காவது நாலு மார்க்குல போச்சு,அவன் எடுத்ததே நாலு மார்க்தாண்டா.(என்று சொல்லியபடியே ஹா ஹாவென சிரிக்க,டென்ஷனான மூன்றாவது நண்பர்)
நண்பர் 3:செத்தவன் காலு வடக்கே இருந்தா என்ன,தெற்கே இருந்தா என்ன?
மொத்தத்தில் ரெண்டு பேரும் ஃபெயிலு இதில என்ன உனக்கு கம்பேரிஷன் வேண்டிக்கிடக்கு.
(நண்பர் 1 சிரிக்க ,நண்பர் 2 முறைக்க நண்பர் 3 இழுத்து போர்த்திக் கொண்டு தூக்கத்தைக் கண்டினியூ செய்கிறார்.)
Thursday, July 2, 2009
டயலாக்ஸ்: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க....
பணி நிமித்தம் சென்னையில் இருக்கும் நண்பர் ஒருவர் தனது ஊர்த் திருவிழாவைப் பற்றி ஊரில் இருக்கும் தனது நண்பரிடம் தொலைபேசியில் பேசியது.
சென்ற வருடம்:
நண்பர் 1:என்னடா பங்ஸ்(பங்காளி) திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?
நண்பர் 2:அத ஏண்டா கேக்குற இந்த வருஷமும் வடக்கித் தெருவாய்ங்களுக்கும் ,தெக்கித் தெருவாய்ங்களுக்கும் சண்ட,கரகாட்டக்காரிகள கையப் புடிச்சு இழுத்து பெரிய ரகள பண்ணிட்டாய்ங்கடா.
நண்பர் 1:காட்டுமிராண்டி கூட்டம்டா,இந்த மயித்துக்குத்தான் நான் ஊர் பக்கமே வாரதில்ல..
இந்த வருடம்:
நண்பர் 1: என்னடா பங்ஸ் திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?
நண்பர் 2: யப்பா எனக்குத் தெரிஞ்சு இந்த வருஷந்தாண்டா ஒரு சண்ட சச்சரவு இல்லாம திருவிழா நடந்துச்சு.நீயும் வந்திருக்கலாம்டா.
நண்பர் 1: ஆமா,அங்க என்ன அமைதி மாநாடா நடத்துறிய.ஒரு திருவிழான்னா நாலு சண்ட சத்தமுன்னு இருந்தாத்தானடா பாக்க நல்லா இருக்கும்.
நண்பர் 2:?????
காலை நேரத்தில் நிறைய கல்லூரி மாணவ,மாணவிகளை ஏற்றியபடியே வந்து கொண்டிருக்கும் பஸ்ஸில் தங்களுடைய நிறுத்தத்தில் இறங்க எத்தணிக்கும் இரு மாணவிகள் படியில் ஜொள்ளுவிட்டபடியே நிற்கும் மாணவர்களிடம்,
மாணவி 1:கொஞ்சம் வழிய விடுங்க இறங்கணும்
மாணவி 2:அதான் ஏற்கனவே லிட்டர் லிட்டரா வழியுதே இன்னுமா வழியணும். அதற்கு மாணவர்கள் சொன்னது சென்ஸார்(யூகிக்க முடியுதா?).
பையனின் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்த அவனது தந்தை அடி பிரித்து எடுத்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த பக்கத்து வீட்டுக்காரர்,
பக்கத்து வீட்டுக்காரர்:எதுக்கு அவன இப்படி போட்டு அடிக்குறீங்க?
அப்பா:பாருடா முப்பத்தாறு மார்க்குதான் வாங்கியிருக்கான்.
ப.வீட்டுக்காரர்:சரி சரி விடுங்க,அடுத்த பரிச்சையிலே நிறைய மார்க் எடுப்பான். ஆமா எந்த சப்ஜெக்டுல மாப்ள இவ்வளவு கொறச்சலா எடுத்திருக்க(பையனைப் பார்த்துக் கேட்கிறார்).
அப்பா:ஏலேய் அவன் மொத்தமாவே எல்லா பாடத்திலேயும் சேர்த்தே அவ்வளவுதாண்டா எடுத்திருக்கான்.
இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் டரியலாகி பின் சொன்ன டயலாக்கில் டரியலானார் பையனின் அப்பா.
ப.வீட்டுக்காரர்:அப்போ உம்ம புள்ள டோட்டலா(total) பாஸாகிட்டான்னு சொல்லுங்க.
சென்ற வருடம்:
நண்பர் 1:என்னடா பங்ஸ்(பங்காளி) திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?
நண்பர் 2:அத ஏண்டா கேக்குற இந்த வருஷமும் வடக்கித் தெருவாய்ங்களுக்கும் ,தெக்கித் தெருவாய்ங்களுக்கும் சண்ட,கரகாட்டக்காரிகள கையப் புடிச்சு இழுத்து பெரிய ரகள பண்ணிட்டாய்ங்கடா.
நண்பர் 1:காட்டுமிராண்டி கூட்டம்டா,இந்த மயித்துக்குத்தான் நான் ஊர் பக்கமே வாரதில்ல..
இந்த வருடம்:
நண்பர் 1: என்னடா பங்ஸ் திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?
நண்பர் 2: யப்பா எனக்குத் தெரிஞ்சு இந்த வருஷந்தாண்டா ஒரு சண்ட சச்சரவு இல்லாம திருவிழா நடந்துச்சு.நீயும் வந்திருக்கலாம்டா.
நண்பர் 1: ஆமா,அங்க என்ன அமைதி மாநாடா நடத்துறிய.ஒரு திருவிழான்னா நாலு சண்ட சத்தமுன்னு இருந்தாத்தானடா பாக்க நல்லா இருக்கும்.
நண்பர் 2:?????
காலை நேரத்தில் நிறைய கல்லூரி மாணவ,மாணவிகளை ஏற்றியபடியே வந்து கொண்டிருக்கும் பஸ்ஸில் தங்களுடைய நிறுத்தத்தில் இறங்க எத்தணிக்கும் இரு மாணவிகள் படியில் ஜொள்ளுவிட்டபடியே நிற்கும் மாணவர்களிடம்,
மாணவி 1:கொஞ்சம் வழிய விடுங்க இறங்கணும்
மாணவி 2:அதான் ஏற்கனவே லிட்டர் லிட்டரா வழியுதே இன்னுமா வழியணும். அதற்கு மாணவர்கள் சொன்னது சென்ஸார்(யூகிக்க முடியுதா?).
பையனின் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்த அவனது தந்தை அடி பிரித்து எடுத்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த பக்கத்து வீட்டுக்காரர்,
பக்கத்து வீட்டுக்காரர்:எதுக்கு அவன இப்படி போட்டு அடிக்குறீங்க?
அப்பா:பாருடா முப்பத்தாறு மார்க்குதான் வாங்கியிருக்கான்.
ப.வீட்டுக்காரர்:சரி சரி விடுங்க,அடுத்த பரிச்சையிலே நிறைய மார்க் எடுப்பான். ஆமா எந்த சப்ஜெக்டுல மாப்ள இவ்வளவு கொறச்சலா எடுத்திருக்க(பையனைப் பார்த்துக் கேட்கிறார்).
அப்பா:ஏலேய் அவன் மொத்தமாவே எல்லா பாடத்திலேயும் சேர்த்தே அவ்வளவுதாண்டா எடுத்திருக்கான்.
இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் டரியலாகி பின் சொன்ன டயலாக்கில் டரியலானார் பையனின் அப்பா.
ப.வீட்டுக்காரர்:அப்போ உம்ம புள்ள டோட்டலா(total) பாஸாகிட்டான்னு சொல்லுங்க.
Tuesday, June 9, 2009
பசங்க படமும் எனது பால்ய காலமும்
"பசங்க" படத்தில் வரும் ஜீவாவை போன்றே எனது சிறுவயதில் நானும் இருந்திருக்கேன்.ஜீவாவிற்கு பக்கடாவும் மணியும் எப்படியோ அது மாதிரி எனக்கு கோபுவும்,தங்கப்பனும்(ஏத்தியெல்லாம் விடமாட்டானுங்க). எங்கே போனாலும் ஒன்னாத்தான் திரிவோம்.நான் என்ன சொன்னாலும் ரெண்டு பேரும் எதிர்த்து பேசமாட்டானுங்க. எல்லாத்துக்கும் "சரி"ன்னு தலையாட்டுவானுங்க. ஏன் அப்படி என்றால் கீழே இருக்கிற உரையாடல்களை படித்தால் உங்களுக்கே புரியும்.
உரையாடல் 1:
நான்: கோபு நான் ஒரு ஜோக் சொல்றேன்டா?
கோபு:சொல்லு சொல்லு..
(ஏதோ ஒரு ஜோக் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தான் கோபு)
நான்:இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற,இந்த ஜோக்ல உனக்கு என்ன புரிஞ்சிச்சு சொல்லு பர்ப்போம்?.
கோபு:அதான் நல்லா காமடியா இருந்துச்சு.
நான்:என்ன காமடியா..
கோபு: (மௌனம் காக்கிறான்)
நான்:சொல்லுடா உனக்கு என்ன புரிஞ்சிச்சு?
கோபு:ம்ம் போடா நீ புரியிற மாதிரி ஜோக்கும் சொல்ல மாட்ட,சிரிக்காட்டியும் அடிப்ப,அதான் சிரிச்சேன்.
நான்:??????
உரையாடல் 2:
நான்:ஏன்டா கோபு இப்படி டியூப் லைட்டா இருக்க?
தங்கப்பன்:ஏன் அவன எப்ப பார்த்தாலும் டியூப் லைட்டுன்னு திட்டுறே,டியூப் லைட்டுன்னா என்னா?
நான்:ம்ம் ஸ்விட்ச் போட்டவுடனேயே ட்யூப்லைட் எரியாது கொஞ்ச நேரம் கழித்துதான் எரியும் அதுமாதிரிதாண்டா இவனும் சொன்ன உடனே எதையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறான்.
தங்கப்பன்:அப்போ உடனேயே புரிஞ்சிகிட்டா குண்டு பல்பா?
நான்:?????????
உரையாடல் 3:
ஒருமுறை காட்டுக்கு எலந்த பழம் பறிக்கச் சென்றோம். அப்போது எலந்த மரத்தின் உச்சியில் தேன் கூடு இருந்ததைப் பார்த்த நான், கோபுவிடம்..
நான்:டேய் அங்கா பாருடா தேன் கூடு.
கோபு:எங்க?
நான்:உச்சாங் கெளையில இருக்கு பாரு.
கோபு:எங்கடா எனக்கு தெரியல.
நான்:டேய் நல்லா பாருடா எவ்வளோ பெருசா இருக்கு,பக்கத்தில கூட ஒரு பட்ட குச்சி இருக்கு பாரு.
கோபு: (கொஞ்ச நேரம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே) ம்ம் ஆமான்டா,எவ்ளோ பெருசா இருக்கு.
(எனக்கு அவன் இன்னும் பார்க்கல சும்மா சொல்றான்னு புரிஞ்சிடுச்சு அதனால)
நான்: பாருடா அந்த தேன் பக்கத்தில இப்போ ஒரு குருவி வந்து உட்கார்ந்திருக்கு.
கோபு:ஆமாண்டா சூப்பரா இருக்குல்ல.
நான்:எங்க இருக்கு குருவி தெரியலேன்னா தெரியலன்னு சொல்லு எதுக்கு இப்படி ..என்று வைத்தேன் தலையில் ஒரு கொட்டு.
கோபு:உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.
இன்னும் இப்படி நிறைய இருக்குங்க."பசங்க" படம் பார்த்த பிறகு எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.அதான் இந்த கொசுவத்தி.
அப்படியே பசங்க படம் பார்க்காதவங்க பார்த்திடுங்க, அருமையான படம். ஃபிரேம் பை ஃபிரேமா ரசிக்க வேண்டிய படம்.
வகுப்பறை காட்சிகளிளெல்லாம் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் அத்தனை சிறுவர் சிறுமியரும். ஏதோ ஹிடன் கேமரா வைத்து படம் பிடித்தது போல் மாணவர்களின் செயல்கள், குறும்புகள் அத்தனையும் இயல்பு மாறாமல் படமாக்கப்பட்டிருக்கிறது.
பசங்களின் குறும்பு ஒரு பக்கமென்றால் விமல்,வேஹாவின் காதல் ஆஹா போடவைக்கிறது.விமல் அறிமுகமாம்,பையனின் மதுரைத்தமிழ் உச்சரிப்பு புல்லரிப்பென்றால் வேஹாவின் புருவ சுழிப்பு "பருவ செழிப்பு". இருவரும் அசத்தியிருக்கிறார்கள். "எப்பூடி" புஜ்ஜிமா வரும் சீன்களிலெல்லாம் தியேட்டரில் விசில்.
அன்புக்கரசு,ஜீவா,பக்கடா,மணி,"அப்பத்தா மங்கலம்" ஆகிய இந்த பசங்கள அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பசங்க சும்மா பூந்து வெளையாடியிருக்கானுங்க. கூட அந்த குட்டி பொண்ணும் குறைவான காட்சியில் வந்தாலும் மனதில் நிறைவாக தங்கிவிடுகிறாள்.
ஜீவாவின் அப்பாவாக நடித்திருப்பவர் சின்ன சின்ன முக பாவங்களில் அசத்துகிறார். குறிப்பாக "ஸார் உங்கள ஹெட்மாஸ்டர் கூப்பிடுறார்"என்று பியூன் சொல்லும் போது அவர் கொடுக்கும் அந்த சின்ன தலையாட்டலே அத்தனை தேர்ந்த நடிப்பு.அன்புவின் அம்மா அப்பாவாக நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் வெகு யதார்த்தம். அன்புவின் வீட்டில் நடக்கும் காட்சிகள் அத்தனை அழகு. அவர்கள் நிஜமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலவே நினைக்கத் தோன்றுகிறது படம் முடிந்த பின்னும்.
"ஒரு வெட்கம் வருதே","அன்பாலே அழகாகும் வீடு"என ஜேம்ஸ் வசந்தனும் தன் பங்கிற்கு மனதை வருடுகிறார். ஒளிப்பதிவு அருமை குறிப்பாக "ஒரு வெட்கம் வருதே" பாடலில் மழை நம்மீது பொழிவதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் பாண்டியராஜ் அவர்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு நிறைய நன்றிகளும் வாழ்த்துகளும்.
உரையாடல்:சிறுகதைக்கான எனது சிறுகதை இங்கே
உரையாடல் 1:
நான்: கோபு நான் ஒரு ஜோக் சொல்றேன்டா?
கோபு:சொல்லு சொல்லு..
(ஏதோ ஒரு ஜோக் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தான் கோபு)
நான்:இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற,இந்த ஜோக்ல உனக்கு என்ன புரிஞ்சிச்சு சொல்லு பர்ப்போம்?.
கோபு:அதான் நல்லா காமடியா இருந்துச்சு.
நான்:என்ன காமடியா..
கோபு: (மௌனம் காக்கிறான்)
நான்:சொல்லுடா உனக்கு என்ன புரிஞ்சிச்சு?
கோபு:ம்ம் போடா நீ புரியிற மாதிரி ஜோக்கும் சொல்ல மாட்ட,சிரிக்காட்டியும் அடிப்ப,அதான் சிரிச்சேன்.
நான்:??????
உரையாடல் 2:
நான்:ஏன்டா கோபு இப்படி டியூப் லைட்டா இருக்க?
தங்கப்பன்:ஏன் அவன எப்ப பார்த்தாலும் டியூப் லைட்டுன்னு திட்டுறே,டியூப் லைட்டுன்னா என்னா?
நான்:ம்ம் ஸ்விட்ச் போட்டவுடனேயே ட்யூப்லைட் எரியாது கொஞ்ச நேரம் கழித்துதான் எரியும் அதுமாதிரிதாண்டா இவனும் சொன்ன உடனே எதையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறான்.
தங்கப்பன்:அப்போ உடனேயே புரிஞ்சிகிட்டா குண்டு பல்பா?
நான்:?????????
உரையாடல் 3:
ஒருமுறை காட்டுக்கு எலந்த பழம் பறிக்கச் சென்றோம். அப்போது எலந்த மரத்தின் உச்சியில் தேன் கூடு இருந்ததைப் பார்த்த நான், கோபுவிடம்..
நான்:டேய் அங்கா பாருடா தேன் கூடு.
கோபு:எங்க?
நான்:உச்சாங் கெளையில இருக்கு பாரு.
கோபு:எங்கடா எனக்கு தெரியல.
நான்:டேய் நல்லா பாருடா எவ்வளோ பெருசா இருக்கு,பக்கத்தில கூட ஒரு பட்ட குச்சி இருக்கு பாரு.
கோபு: (கொஞ்ச நேரம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே) ம்ம் ஆமான்டா,எவ்ளோ பெருசா இருக்கு.
(எனக்கு அவன் இன்னும் பார்க்கல சும்மா சொல்றான்னு புரிஞ்சிடுச்சு அதனால)
நான்: பாருடா அந்த தேன் பக்கத்தில இப்போ ஒரு குருவி வந்து உட்கார்ந்திருக்கு.
கோபு:ஆமாண்டா சூப்பரா இருக்குல்ல.
நான்:எங்க இருக்கு குருவி தெரியலேன்னா தெரியலன்னு சொல்லு எதுக்கு இப்படி ..என்று வைத்தேன் தலையில் ஒரு கொட்டு.
கோபு:உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.
இன்னும் இப்படி நிறைய இருக்குங்க."பசங்க" படம் பார்த்த பிறகு எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.அதான் இந்த கொசுவத்தி.
அப்படியே பசங்க படம் பார்க்காதவங்க பார்த்திடுங்க, அருமையான படம். ஃபிரேம் பை ஃபிரேமா ரசிக்க வேண்டிய படம்.
வகுப்பறை காட்சிகளிளெல்லாம் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் அத்தனை சிறுவர் சிறுமியரும். ஏதோ ஹிடன் கேமரா வைத்து படம் பிடித்தது போல் மாணவர்களின் செயல்கள், குறும்புகள் அத்தனையும் இயல்பு மாறாமல் படமாக்கப்பட்டிருக்கிறது.
பசங்களின் குறும்பு ஒரு பக்கமென்றால் விமல்,வேஹாவின் காதல் ஆஹா போடவைக்கிறது.விமல் அறிமுகமாம்,பையனின் மதுரைத்தமிழ் உச்சரிப்பு புல்லரிப்பென்றால் வேஹாவின் புருவ சுழிப்பு "பருவ செழிப்பு". இருவரும் அசத்தியிருக்கிறார்கள். "எப்பூடி" புஜ்ஜிமா வரும் சீன்களிலெல்லாம் தியேட்டரில் விசில்.
அன்புக்கரசு,ஜீவா,பக்கடா,மணி,"அப்பத்தா மங்கலம்" ஆகிய இந்த பசங்கள அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பசங்க சும்மா பூந்து வெளையாடியிருக்கானுங்க. கூட அந்த குட்டி பொண்ணும் குறைவான காட்சியில் வந்தாலும் மனதில் நிறைவாக தங்கிவிடுகிறாள்.
ஜீவாவின் அப்பாவாக நடித்திருப்பவர் சின்ன சின்ன முக பாவங்களில் அசத்துகிறார். குறிப்பாக "ஸார் உங்கள ஹெட்மாஸ்டர் கூப்பிடுறார்"என்று பியூன் சொல்லும் போது அவர் கொடுக்கும் அந்த சின்ன தலையாட்டலே அத்தனை தேர்ந்த நடிப்பு.அன்புவின் அம்மா அப்பாவாக நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் வெகு யதார்த்தம். அன்புவின் வீட்டில் நடக்கும் காட்சிகள் அத்தனை அழகு. அவர்கள் நிஜமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலவே நினைக்கத் தோன்றுகிறது படம் முடிந்த பின்னும்.
"ஒரு வெட்கம் வருதே","அன்பாலே அழகாகும் வீடு"என ஜேம்ஸ் வசந்தனும் தன் பங்கிற்கு மனதை வருடுகிறார். ஒளிப்பதிவு அருமை குறிப்பாக "ஒரு வெட்கம் வருதே" பாடலில் மழை நம்மீது பொழிவதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் பாண்டியராஜ் அவர்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு நிறைய நன்றிகளும் வாழ்த்துகளும்.
உரையாடல்:சிறுகதைக்கான எனது சிறுகதை இங்கே
Subscribe to:
Posts (Atom)