Monday, January 24, 2011

போகிற‌ போக்கில்...

ம‌ச்சான்:என்ன‌ய்யா மாமா பொங்க‌ல் வேலையெல்லாம் ரொம்ப‌ சுறுசுறுப்பா பாக்குற‌ மாதிரி தெரியுது?

மாமா:ஏதோ என்னால‌ முடிஞ்ச‌தை செய்றேன்

ம‌ச்சான்:யோவ் முடிஞ்ச‌தை ஏய்யா திருப்பியும் செய்யிற முடியாம‌ இருக்கிற‌ வேலைய‌ பாப்பியா

மாம‌ன்:????

*****************************
ஃபைனான்ஸ் பார்ட்டி:அண்ணே, தேதி ப‌த்தாச்சு இன்னும் உங்க‌ வீட்டில‌ ப‌ண‌ம் க‌ட்ட‌ல‌..

மாமா:ரெண்டு நாள் பொறுத்துக்க‌ப்பா க‌ட்டிடுறேன்.

ம‌ச்சான்:யோவ் மாமா அவ்வ‌ள‌வோ பெரிய‌ ஆளாய்யா நீ, ப‌ண‌ம் க‌ட்ட‌ ரெண்டு நாள் ஆகுமா?அவ்வ‌ளோ ப‌ண‌மாய்யா வ‌ச்சிருக்க‌ ஊர் ப‌ய‌லுவ‌ க‌ண்ணு ப‌டுற‌துக்குள்ள‌ எல்லாத்தையும் க‌ட்டி வ‌ச்சிருய்யா.

மாமா:????

***************************
மாமா:சாப்பிட்ட‌திலேர்ந்து வ‌யித்த‌ வ‌லிக்கிற‌ மாதிரியே இருக்கு

ப‌ங்காளி:அதுக்குத்தான் சொன்னேன் நைட்டுல‌ முட்ட‌(முட்டை) சாப்பிடாதேன்னு.

ம‌ச்சான்:முட்ட‌(முட்டை) சாப்பிட்டதால‌ இருக்காது, வ‌யிறு முட்ட‌ சாப்பிட்டுருப்பாரு அதான் வ‌லிக்குது.

மாமா:????

******************************
ம‌ச்சான்:இந்த‌ சுப்ர‌ம‌ணி எத்த‌ன‌ சுவ‌ரேறி குதிச்சிருப்பான், அவ‌னுக்கு பாருய்யா அருமையான‌ பொண்டாட்டி , இப்ப‌டி திரியிற‌வ‌ய்ங்க‌ளுக்குதாய்யா ந‌ல்ல‌ புள்ள‌ய‌ளா சிக்கிருது ம்ஹீம்..தான் உண்டு சோலி உண்டுன்னு அமைதியா இருக்குற‌வ‌ய்ங்க‌ளுக்கு பாரு இத்து போன‌து நொந்து போன‌து ஓட்ட‌ ஒட‌ச‌லா வ‌ந்து அமையும்..

மாமா:ஆமாமா, நீயும் தான் எந்த‌ வ‌ம்பு தும்புக்கும் போகாம‌ இருக்குற‌, உன‌க்கு எந்த‌ ஓட்ட‌ ஒட‌ச‌லோ..

ம‌ச்சான்:யோவ் ஒந்த‌ங்க‌ச்சியாதான் க‌ட்டிக்க‌லாம்னு இருக்கேன் நீ இப்ப‌டி சொல்ற‌.

மாமா:?????

12 comments:

'பரிவை' சே.குமார் said...

இதுல மச்சான் ஆருங்கோ?
நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவையுடன்... ரொம்ப நல்லாயிருக்கு.

Unknown said...

வெடி சரவெடி


கடைசி தங்கச்சி செமையா

அன்புடன் நான் said...

இலக்கியன் நகைச்சுவை துணுக்குகள் அத்தனையும் நல்ல ரசனை.

பாராட்டுக்கள்.

Chitra said...

மாமா:சாப்பிட்ட‌திலேர்ந்து வ‌யித்த‌ வ‌லிக்கிற‌ மாதிரியே இருக்கு

ப‌ங்காளி:அதுக்குத்தான் சொன்னேன் நைட்டுல‌ முட்ட‌(முட்டை) சாப்பிடாதேன்னு.

ம‌ச்சான்:முட்ட‌(முட்டை) சாப்பிட்டதால‌ இருக்காது, வ‌யிறு முட்ட‌ சாப்பிட்டுருப்பாரு அதான் வ‌லிக்குது.

மாமா:????


.......hilarious!

டக்கால்டி said...

Super

எல் கே said...

சூப்பர்

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி சே.குமார்,(ம‌ச்சான் ஆருன்னு புரிய‌ல‌யா..).

ந‌ன்றி A.சிவ‌ச‌ங்க‌ர்.

ந‌ன்றி சி.க‌ருணாக‌ர‌சு.

ந‌ன்றி சித்ரா.

ந‌ன்றி ட‌க்கால்டி.

ந‌ன்றி எல்.கே.

Unknown said...

:)))))

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி ராஜாண்ணே..!

Anonymous said...

யோவ்! என்னய்யா இப்படி ஆரம்பிச்சிட்டே.....

உருப்படியா ஏதாவது எழுது....

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி வெயிலான்,
கிடைக்கிற‌ நேர‌த்தில் இப்ப‌டி கிறுக்குவ‌தே பெரிய‌ விஷ‌ய‌மாகிவிட்ட‌து வெயிலான். இன்னும் சில‌ மாத‌ங்க‌ளுக்கு கிடைக்கிற‌ கேப்பில் இதே போன்றுதான் வ‌ரும்.

#ட‌வுட்டு:ஆமா இதுக்கு முன்னாடி நான் ஏதோ உருப்ப‌டியா எழுதுன‌ மாதியில்ல‌ கேட்டிருக்கீங்க‌?

Pranavam Ravikumar said...

:-)