Sunday, May 22, 2011

கண்ணே கட்டிக்க வா..






விக்ரம் படத்தின் ”வனிதாமணி வனமோகினி” மெட்டுக்கு எனது முயற்சி...


கயலோ விழி

கரும்போ மொழி
கொல்லாதே..

குறும்பாய் சிரி
உடும்பாய் பிடி
தள்ளாதே..

ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
என்னைச் சேரடி..

ரசிக்கிறான்
கண்ணில் வலை விரிக்கிறான்..ஓஓஓ..

சிரிக்கிறாள்
கன்னம் ரெண்டில் சிவக்கிறாள் ஓ ஓ ஓ..

கனலாய் கனா தினம் எனை வாட்டாதோ..
புனலாய் வரும் வெள்ளம் வெப்பம் தீர்க்காதோ..

அதரம் வழி
மதுரம் சுவை
வகையாய் எனை அணை

அணைத்தால் உனை
திறக்கும் அணை
இனி நான் உந்தன் துணை..

போதும் போதும்
போதையேறும்
பேதை தாங்காது.. (கயலோ விழி..)


இளமையாய்.
எங்கும் இனிமையாய்.. ஓஓஓ..

திறமையாய்
எல்லாம் திருடினாய்..ஓஓஓ

அடியே என்னில் என்ன புது பூகம்பம்
அடடா பொறு இது வெறும் ஆரம்பம்

இடம் வலம் எது
புரியா நிலை
புதிராய் இன்று
பெண்ணே..

தினம் தினம் இனி
இதுதான் நிலை
புலரி வரை
அன்பே..

ஏழை தேகம்
வேளை பார்த்து
சொர்க்கம் சேராதோ.... (கயலோ விழி..)

1 comment:

Unknown said...

பதிவுகள் எழுதி நீண்ட நாடகளாகி விட்டது போல், ஏன் தொடர்ந்து எழுதலாமே.