Monday, July 15, 2013

டைம் பாஸ்-6


வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நமக்கு தரப்படும்ஆப்ஷன்கள் பௌலிங்கா?, ஃபீல்டிங்கா? வகையையிலேயே இருக்கின்றன.
# இந்த ஸ்டேட்டஸ் உங்களுக்கு புடிச்சிருக்கா? இல்லை நல்லாயிருக்கா?

சொல்வதெல்லாம் உண்மையில் குந்தியிருக்கும் ஜட்ஜம்மாக்களிடம், 90களின் கவுண்டமணியை எதுனா ஒரு பஞ்சாயத்துக்கு பிராது கொடுக்கச் சொல்லி கற்பனை செய்து பார்த்து திருப்திபட்டுக்கொள்கிறேன்.
#கொண்ட போட்டவளுக்கெல்லாம் நான் தீர்ப்பு சொல்றதில்ல

மற்றவரை குறைகளோடு நேசி;குறை உன்னிடமே என்றால் கொஞ்சம் யோசி.
# ஆகையினால எல்லோரும் என்னை நேசிங்க.

எம்பொண்டாட்டிக்கு இத்தனை வகை சட்னி வைக்க தெரியுங்கறதே இன்னிக்குத்தான் தெரியும்.
#மச்சான் வந்திருக்கான்.


பகல் தூக்கம், அன்றைய மீதியை நரகமாக்கும்.
#ஆனா தூங்கும்போது சொர்க்கம்யா.

சிறைதான் என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும் சிறகுகள். 
# டேய் சத்தியமா புரியலடா

வயிறு சரியில்லையென்று மணத்தக்காளி சாம்பார் வச்சு கொடுத்தாய்ங்க. அதைப் பார்ததிலிருந்து மனசு சரியில்லை.
#என் கடன் அசைவம் சாப்பிட்டுக் கிடப்பதே

முகத்துல மொளச்சா முகமுடின்னுதானே சொல்லணும், அப்புறம் ஏண்ணே தாடிங்கிறாய்ங்க.
#மாத்தி யோசி என்ற பதத்திற்கான விதையை அனாயசமாய் தூவிய கேரக்டர். 


” டேய் மச்சி நீ எப்பயும் போகாத ஊருக்கே வழி சொல்ற”
“ங்கொய்யால போகாத ஊரு என்ன, போகாத நாட்டுக்கே வழி சொல்லுவேன்..” 
# கூகிள் மேப்ஸ்

நாம் சென்ற பாதையில் இதோ போய்க்கொண்டிருக்கிறேன்,சில கணங்களில் நானும்
சில கணங்களில் நாமுமாய்.

#அப்படியே போய்க்கொண்டே இரு,திரும்ப வந்துறாத

எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ பழகுதல் என்பதுதான் இப்போதைய எனது எதிர்பார்ப்பு.
#இதுக்கு பேருதான்  விசு’வாசம்

எந்த சொல்லிற்குள்ளும்  புதைந்திருக்கும்  என்பதால் கோபமும்கூட ஒரு  கன்னிவெடிதான்.
#வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம எங்கேயோ போய் வாங்கி கட்டிகிட்டு வந்து இங்க தத்துவம் சொல்லிகிட்டு இருக்கான்.

1 comment:

வெற்றிவேல் said...

பகல் தூக்கம், அன்றைய மீதியை நரகமாக்கும்...

நல்ல பொன்மொழி...