Monday, August 24, 2009

உஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே...

நாங்கள் வழக்கமா செல்கிற டீக்கடையில் எப்போதும் வடை போட்டிருப்பார்கள், புதிதாக இப்போது சமோசாவும்.

கடை பையன்:அண்ணே, சமோசா சூப்பரா இருக்கும்ணே சாப்பிட்டுப் பாருங்க.

நண்பர்:வடை சாப்பிடலாம்னு நெனச்சேன், எனக்கு சமோசா பிடிக்காதுப்பா.

க.பை:அப்போ வடை தரவா?

நண்பர்: உங்க கடையில் சமோசா தானே நல்லாயிருக்கும்னு சொன்னே, அதனால எனக்கு வடை வேண்டாம்.

க.பை:?????

=================

அதே டீக்கடையில் மற்றொரு நாள் டீயின் விலை 3 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக திடீர் விலையேற்றம் செய்திருந்தார்கள்.

நண்பர்: என்ன இப்படி திடீன்னு வெலய ஏத்திட்டீங்க.

க.பை: மழை பெய்து தேயிலையெல்லாம் வெள்ளத்தில் மூழ்கிடுச்சாம், அதனால டீத்தூள் வெலையெல்லாம் ஏறி போச்சுண்ணே.

நண்பர்:அப்படின்னா சக்கரை செலவு மிச்சம், நீ விலைய கம்மிதானேப்பா செய்யணும்.

க.பை: எப்படிண்ணே சக்கரை செலவு மிச்சம்?

நண்பர்: நீதானே சொன்ன தேயிலையெல்லாம் வெல்லத்தில மூழ்கிடுச்சுன்னு.

க.பை: ஆரம்பிச்சிட்டீங்களா?

========================

இது இன்னொரு நாள், நண்பர் கேக் ஒன்றை எடுத்து சுவைத்துக் கொண்டே கடை பையனிடம்,

நண்பர்: தம்பி,பர்த்டே கொண்டாடினா எல்லோரும் என்ன கொடுப்பாங்க.

க.பை: கேக்’தாண்ணே கொடுப்பாங்க(சிரித்தபடியே சொன்னான்)

நண்பர்:உன் கடையில் ’கேக்’கே சில பர்த்டே கொண்டாடியிருக்கும் போல.

க.பை:????

30 comments:

Unknown said...

நல்லா இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

//நண்பர்:உன் கடையில் ’கேக்’கே சில பர்த்டே கொண்டாடியிருக்கும் போல.//

இது சூப்பரப்ப்..

சிரிச்சாச்சு

:)

:)

:)

ஈரோடு கதிர் said...

என்ன... டீ கடை பையன் கிட்ட ரொம்ப லந்து பண்றீங்க....


காதல் படத்துல அந்த சின்னப் பையன் சுகுமாருக்கு பெப்ஸி வாங்கிட்டு வர்ற சீன் ஞாபகம் இருக்கட்டும்....

அப்புறம் அவனையே கேப்பீங்க ஏண்ட டீயில சக்கரைக்கு பதிலா உப்பு போட்டியானு

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

அட சிரிங்கப்பா

RRSLM said...

:))))))))))))

Thamira said...

ஹிஹி..

*இயற்கை ராஜி* said...

//நண்பர்://

அந்த நண்பர் பேரு இலக்கியன் ன்னு ஏதோ பட்சி சொல்லுது.அப்படியா?:-))))))))))
அனைத்தும் அருமை

விக்னேஷ்வரி said...

வடை வேண்டாம்னு கடைக்காரனை கடுப்பேத்திய அந்த நண்பர் வெயிலான் தானே. ;)

அடுத்த நண்பர் கார்க்கி?

கடைசியா பரிசலா நீங்களா....

நல்லாருக்கு மொக்கைஸ்.

Unknown said...

ஹா ஹா ஹா சூப்பர் அண்ணா.. :)))

பரிசல்காரன் said...

முடியல!

நையாண்டி நைனா said...

ஹா ஹா ஹா நல்லா இருக்கு.

Mallikondar said...

// உன் கடையில் ’கேக்’கே சில பர்த்டே கொண்டாடியிருக்கும் போல. //

சூப்பர் போங்க...

- மல்லிக்கொண்டார்

இரும்புத்திரை said...

வட போச்சா

நாஞ்சில் நாதம் said...

நண்பர்? ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

வால்பையன் said...

கடைசி ஜோக் செம சூப்பர்!

Unknown said...

நல்லா இருக்கு, டீ கடை :)

//நண்பர்:உன் கடையில் ’கேக்’கே சில பர்த்டே கொண்டாடியிருக்கும் போல.//

க.பை: தெரியலண்ணே, நான் வேலைல சேந்து 3 வருஷம்தான் ஆகுது!

நண்பர் சொல்லக் கேட்டுச் சிரித்தது :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி ரவிஷங்கர்.

நன்றி பிரியமுடன் வசந்த்.

நன்றி கதிர்(உஷாராத் தான் இருக்கனும்).

நன்றி நிஜமா நல்லவன்.

நன்றி RR.

நன்றி ஆதி.

நன்றி சின்ன அம்மிணி.

நன்றி இயற்கை.( :) )

நன்றி விக்னேஷ்வரி.(நீங்க குறிப்பிட்ட யாரும் இல்லை).

நன்றி ஸ்ரீமதி.

நன்றி பரிசல்காரன்.

நன்றி நையாண்டி நைனா.

நன்றி மல்லிக்கொண்டார்.

நன்றி அரவிந்த்.

நன்றி நாஞ்சில் நாதம்.

நன்றி வால்பையன்.

நன்றி தஞ்சாவூரான்.(ஒரு உறையில ஒரு கத்தி தான் இருக்கணும் )

தினேஷ் said...

அண்ணே உங்க பதிவெல்லாம் படிக்கிறேன் பின்னூட்டம் போடாட்டாலும்..

என்ன பதிவுதான் போடல (எதாச்சும் சரக்கு கிக்கனுமில்லை.. சரக்குக்கு பஞ்சம் அவ்ளோதான்)..

நாடோடி இலக்கியன் said...

நன்றி சூரியன்.(உங்க பக்கம் புது பதிவையே காணாமேன்னு தான் கேட்டேன்).

பாசகி said...

ஜி உண்மைய சொல்லுங்க, இத்தனை அக்கப்போருக்கு அப்புறமும் அந்த கடைப்பையன் உங்களுக்கு டீ எடுத்துட்டு வர்றாரா:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

நாடோடி இலக்கியன் said...

நன்றி பாசகி.

நன்றி T.V.R.

க.பாலாசி said...

//நண்பர்:உன் கடையில் ’கேக்’கே சில பர்த்டே கொண்டாடியிருக்கும் போல.//

இது நல்லாருக்கு அன்பரே...

இப்டியே போனிங்கன்னா, நீங்க வாங்குற கேக்ல பாம் வைச்சிட போறாங்க...

நன்றி தஞ்சாவூரான்.(ஒரு உறையில
ஒரு கத்தி தான் இருக்கணும்)

யாரு சொன்னா...சின்ன சின்னதா...மூணாகூட வைச்சிக்கலாம்...(நானும்தான்)

நாடோடி இலக்கியன் said...

நன்றி பாலாஜி.(ஆமா,மூனா வச்சா அது கத்தி இல்ல கத்திகள் எப்பூ...டி).

Unknown said...

//நன்றி பாலாஜி.(ஆமா,மூனா வச்சா அது கத்தி இல்ல கத்திகள் எப்பூ...டி).//

பதிவின் தலைப்பை ஒரு தபா படிக்கவும் :))

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

நாடோடி இலக்கியன் said...

@தஞ்சாவூரான்,

இன்னும் இங்க தான் சுத்திகிட்டு இருக்கீங்களா.

:)

Unknown said...

:-D

ரசித்தேன்..

நாடோடி இலக்கியன் said...

நன்றி பட்டிக்காட்டான்,(தொடரும் உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி :) )

Unknown said...

//.. நாடோடி இலக்கியன் 28 August, 2009 12:11:00 PM IST

நன்றி பட்டிக்காட்டான்,(தொடரும் உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி :) ..//

நோ.. நோ.. எமோசனல் ஆகக்கூடாதுங்க..

:-)

Chitra said...

சமோசா-வடை ஜோக் - மொறு மொறு. சூப்பர்.